என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்லா ஷபிக்"

    • தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை அப்துல்லா ஷபிக் பிடித்துள்ளார்.
    • இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி இப்போட்டியில் அப்துல்லா ஷபிக் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் சாதனையை இவர் படைத்துள்ளார்.

    முன்னதாக, பார்ல் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த அப்துல்லா ஷபிக், கடைசி ஒருநாள் போட்டியின் போது காகிசோ ரபாடா பந்துவீச்சில் 0 ரன்களில் வெளியேறியதன் காரணமாக இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்று முறை 0 அவுட்டாகியுள்ளார்.

    அதன்படி அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகினார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்தை அப்துல்ல ஷபிக் பிடித்துள்ளார்.

    இவரைத் தவிர்த்து இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் ஜெயவர்தனே, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் சல்மான் பட், ஷோயப் மாலிக், உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

    • இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    காலே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது.

    இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    இமாம் உல் ஹக் 35 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    ×