search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 தனிப்படை அமைப்பு"

    • கொலை செய்யப்பட்ட வாலிபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதுதெரிய வந்தது.
    • அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தியதில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.

    இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் படி ஆய்வு செய்தபோதுதான் கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்களுடன் மது குடிக்க சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் போதுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

     இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித் குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர்என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை சிறைக்கு சென்றுள்ள தனிப்படை போலீசார் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தயார் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைகடையின் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உள்ளனர்.

    அப்போது அவர்கள் லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.இதனால் பல லட்சம்மதிப்புள்ள தங்கம், வெள்ளி தப்பியது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் கடையின் முன் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த காவலாளிகள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது நகை கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து அவர்கள் கடையின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் தலைைமயில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அருகில் உள்ள திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் மனைவி கொலையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகத்தில் இரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன. பண்ருட்டி காங்கே யன் குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம் மனைவி மலர்க்கொடி (வயது 54). இவர்களது மகன் சிவகுரு (30). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் . நேற்று உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார . பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதற்கிடையில் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் .

    அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது . இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , தோடோடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு வந்து , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெ க்டர் குருமூர்த்தி, சப்-இ ன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததிலும் , பொதுமக்களிடம் நடத்திய விசாரணையிலும் , அந்த வழி யாக வாலிபர் ஒருவர் ரத்தக்கறையுடன் நடந்து சென்றது தெரியவந்தது

    . இந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை புதுவை மாநிலம் சாராயக்கடையில் இருந்து பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பதை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மலர்கொடி கொலை செய்யப்பட்ட இடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீசார் குடியிருப்பு பகுதி என்பதால் எந்நேரமும் போலீசார் சென்றுவரும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×