search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டில்"

    • தர்மராஜ் வெட்டுமணியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48) தொழிலாளி. இவரை பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஆபாசமாக பேசியுள்ளார். இந்நிலையில் தர்மராஜ் வெட்டுமணியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது பெண்ணின் உறவினர் ராஜன் என்பவரி டம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து தர்மராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் தர்மராஜை உடைந்த பாட்டிலால் கையில் குத்தி கிழித்துள்ளனர். இதனால் தர்மராஜ் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததும், 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தர்மராஜை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், ஓரளவுக்கு குடிநீரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
    • குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டும்.

    உடுமலை :

    தற்போது பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் குடிநீரின் தேவை அதி கரித்து வருகிறது. மேலும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், ஓரளவுக்கு குடிநீரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    இவ்வாறு உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் ஓட்டல்கள், சாலையோர உணவுக்கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டும். இதன்வாயிலாக நுகர்வோருக்கு பாது காப்பான, சுகாதாரமான உணவு, குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கோடை துவங்கி உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் பல இடங்களில், பி.எஸ்.ஐ., முத்திரை பெறாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படு கின்றன. தவிர பாக்கெட் குடிநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ், பழச்சாறு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

    இதனால் நகரில் ஆங்கா ங்கே விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் தரத்தை துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து தன்னார்வ லர்கள் கூறிய தாவது:- மாவட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குவதாக புகார் உள்ளது. பி.ஐ.எஸ்., அனுமதி இல்லாமல் பாக்கெட், பாட்டில் குடிநீர் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது.பி.ஐ.எஸ்., அனுமதி பெற காலதாமதம், ஏராளமான நடைமுறை சிக்கல் இருப்ப தால் சில நிறுவ னங்கள் மூலிகை குடிநீர், 'பிளேவர்டு டிரிங்கிங் வாட்டர்' என குடிநீர் விற்பனை செய்கின்றனர். ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
    • காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களை கைது செய்து வருகின்றனா்.

    தாராபுரம் :

    கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரில் பா.ஜ.க. நிா்வாகியின் வீடு என நினைத்து மில் அதிபரின் வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைக் கைது செய்து வருகின்றனா்.

    மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக் கொடுக்க மறுத்து வருவதோடு, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விழிப்புணா்வு நோட்டீசும் ஒட்டி வைத்துள்ளனா்.

    • இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.
    • பலத்த காயமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் (வயது 50) என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.இதனை மருத்துவமனை கம்பவுண்டர் சதாசிவம்(40) தட்டி கேட்டார்.

    இதில் அப்துல்ரகுமான் ஆத்திரமடைந்து பாட்டிலால் சதாசிவத்கொதை குத்தி னார். மேலும் தன்னை தானே குத்தி கொண்டார். இதில் பலத்த காயமமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சேசை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×