search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்தொகை"

    • இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது.
    • சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 1.45 பில்லியன், 2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 1.5 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம் ஆகும். வளர்ச்சிக்கான குடியேற்றத்தில் முன்னணி நாடுகளில் அமெரிக்கா உள்ளது.

    இந்தியா மற்றும் சீனாவை தொடர்ந்து 2100 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் (511 மில்லியன்), நைஜீரியா (477 மில்லியன்), காங்கோ ஜனநாயகக் குடியரசு (431 மில்லியன்), மற்றும் அமெரிக்கா (421 மில்லியன்) மக்கள்தொகையை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 345 மில்லியன்.

    இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட ஒன்பது மில்லியன் அதிகம். 2011-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் மக்கள்தொகை 2054-ல் 1.692 பில்லியன் ஆகவும், 2061-ல் 1.701 பில்லியன் ஆகவும் உயரும் என்று அறிக்கை கூறுகிறது.

    சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது. இந்திய மக்கள்தொகையின் தற்போதைய சராசரி வயது 28.4 ஆண்டுகள் ஆகும், இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா 39.6 ஆண்டுகள் மற்றும் அமெரிக்கா 38.3 ஆண்டுகள் ஆகும். 2100-ல் இந்த எண்கள் முறையே 47.8 ஆண்டுகள், 60.7 ஆண்டுகள் மற்றும் 45.3 ஆண்டுகள் ஆகும்.

    • திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
    • பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    பாதிப்பு

    இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.

    மனு

    திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

    • உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி நடந்தது
    • சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழியுடன் பேரணி நடத்தப்பட்டது

    பேரணியில் காலை 8:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதனை தொடர்ந்து சுகாதார நிலையம் முன்பு புற நோயாளிகளுடன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பின்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுகாதார மேற்பார்வையாளர்கள் போன்றோர் பேரணையாக நடந்து சென்று மக்கள் தொகை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் சிந்துஜா மருத்துவர் முன்னிலை வகித்தார் சுகாதார மேற்பார்வையாளர் வகில். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் தமயந்தி உமா .சீதாராமன். நரேந்திரன். கருப்பண்ணன். ஜோயல். விவின் போன்ற சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர் பேரணிக்கு திருமானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செல்போன் ஆப்பை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு மாணவிகளுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ஆப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விளக்கமளித்தார்.

    ×