என் மலர்
நீங்கள் தேடியது "தெப்பத்திருவிழா கொடியேற்றம்"
- ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.
- திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 3-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 3-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது
திருச்சி:
பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா நேற்று மாலை 5.30 மணிக்கு துனுர் லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவின் முதல் நாளான நேற்று அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.
விழாவின் 2ம் நாளான இன்று அம்மன் கிளிவாகனத்திலும், 3ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிஷப மூஷிகமயூர வாகனத்திலும், 7-ம் நாள் பல்லக்கிலும், 8-ம் நாள் சிம்மவாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதிஉலா வருகின்றார்.
விழாவின் 9-ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை கோ ரதத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், 10-ம் நாள் பல்லக்கிலும் வீதியுலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 3-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.