என் மலர்
நீங்கள் தேடியது "நெறிமுறைகள்"
- யோகாசன பயிற்சி செய்தல்.
- அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.
இந்து மக்களின் 7 கடமைகள்
1.தினம் காலையில் மந்திரம் கூறி தியானப்பயிற்சி செய்தல் பிறகு அன்றாட வேலைகளை திட்டமிடுதல்.
2. யோகாசன பயிற்சி செய்தல்.
3. காரம், புளிப்பு, எண்ணை குறைவாக உள்ள உணவை அளவாக உட்கொள்ளுதல்.
4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மீக நூல் படித்தல் அல்லது ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்.
5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.
6. தன் குற்றம் கண்டறிந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம உயர்வு பெறுதல்.
7. சமயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புண்ணியம் சேர்த்தல்
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். மறுமைக்கான பாதை தெளிவாகும்.
- பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
- அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்.
சிவதர்மம் என்பது யாது?
1.கொல்லாமை,
2.பழிக்கு அஞ்சுதல்,
3.பொறுமை,
4.நலம்புரிதல்,
5.உள்ளன்புடன் இருத்தல்,
6.இயன்றவரை கொடைச் செயல்கள் புரிதல்,
7.சிவனாகிய சச்சிதானந்தத்தை அர்ச்சனை செய்தல்,
8.புண்ணிய காரியங்களை செய்தல்,
9.சிவபெருமானை மானசீகமாக நினைத்து பூஜித்தல்,
10. அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்,
11. மனசாட்சிக்கு மீறிய செயல்களை செய்யாதிருத்தல்,
12. தீய வார்த்தைகளை உபயோகிக்காதிருத்தல்,
13. பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
14. எந்த உயிரையும் துன்புறுத்தாதிருத்தல்,
15. நல்வழி நற் சிந்தனையில் செல்லுதல்
- மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது.
- கட்சி விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தேர்வுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்ட நிலையில், நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது.
இழுபறி உள்ள மாவட்டங்களில் பதவிகள் தேர்தல் மூலமாகவும், மற்று மாவட்டங்களில் ஒரு மனதாகவும் நியமிக்கப்பட உள்ளன.
கட்சி விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
- 12-வது தவணை தொகை பெறுவதற்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
- eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர்
நமது நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யத் தேவையான முக்கியமான இடு பொருட்களை தற்சார்புடன் வாங்குவதற்கு உதவிட பிரதமரின் கவுரவ நிதி உதவித்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணப் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் நடப்பு 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
அதனடிப்படிடையில் தற்போது eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் நில உடைமைப்பட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரதமரின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக அவற்றை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
12-வது தவணை பணப்பலன் பெற கட்டாயம் இந்த இரு வழி முறைகளையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும், வருகிற 31-ந் தேிக்குள் இந்த இரு நடை முறைகளையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
- ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
- ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்காவிட்டால் மாணவர்கள் மோசமான நிலைக்கு போவார்கள்.
சென்னை:
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.
இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.