search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ அதிகாரி"

    • சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.
    • ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் அதிகாரி வந்தனாவுக்கு உள்ளது.

    கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. தென்மாநிலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ்., தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2004-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியானார்.

    பயிற்சிக்கு பின்னர், ராஜஸ்தான் மாநில கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். அங்கு பல்வேறு இடங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதேபோல், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் அதிகாரியாக வந்தனா பணியாற்றியுள்ளார்.

    தற்போது என்.ஐ.ஏ.வில் தென்மாநிலங்களுக்கான பிரிவில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இன்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு பயிற்சியையும் பெற்றுள்ளார். இது மிகவும் கடிமையான பயிற்சியாகும்.

    இவர் விசாரித்த வழக்குகளில் மிகவும் முக்கியமானது கேரள மாநிலத்தில் நடந்த தங்கக்கடத்தல் வழக்கு. அதுமட்டுமின்றி ஐதராபாத், பெங்களூருவில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் இவருக்கு உள்ளது.

    இதேபோல இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. கொச்சி கிளையில் சூப்பிரண்டாக உள்ள ஸ்ரீஜித் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அசாம் மாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரும் அடிப்படைவாத அமைப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் பெற்றவர். திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கை இவரது தலைமையிலான குழுதான் விசாரணை நடத்தியது.

    • ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை .
    • காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் 2 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சென்று ஈரோடு ஆர்.என். புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டைரிகள், சிம்கார்டு, வங்கி பாஸ்புக் உள்ள ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீசார் அந்த குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அருகில் வசிக்கும் பக்கத்து வீட்டுகாரர்களிடம் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.

    அங்கு வசிபவர்களிடம் எத்தனை வருடமாக இங்கு தங்கி உள்ளனர். சந்தேகப்படும் படி நபர்கள் யாரேனும் வந்து சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நடைபெறுகிறது.

    ×