என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி விழுந்தார்"

    • . இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
    • அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.எல்.புரம் புது நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்நேற்று இரவு இவர் திருச்செந்தூர்எக்ஸ்பிரஸ் ெரயிலில்ஏறி திருச்செந்தூ ருக்கு பயணம் செய்தார். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் என தவறி விழுந்தார். அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
    • மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.

    அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்

    • பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    கள்ளகுறிச்சி: 

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சீர்ப–னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). கொத்தனாரார். இவர் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ×