என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் சிறைபிடிப்பு"
- பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
- பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.
பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருகிறார்கள்.
- பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏப்பாக்கம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர்
இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தடம் எண் 23 மற்றும் 21 ஆகிய பஸ்கள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது 6பி தொடர்ந்து சென்று வரும் நிலையில் அந்த பஸ்சும் ஒரு சில நாட்களில் ஏப்பாக்கம் கிராமத்திற்கு வரவில்லை எனவும் மாலை நேரங்களில் பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருவதாகவும் கூறி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிட ப்பட்டது.இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள சேந்தநாட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் வானாம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவேகூடுதல் பஸ்கள் விடவேண்டுமம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சினை சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்க ப்பட்டது தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜகதீசன் தலைமையி லான போலீசார் விரைந்து செ ன்றனர்.பின்னர் மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் செய்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்