என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உதவித்தொகை"
- அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
- 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
அரசு பள்ளிகளில் 6முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர். இதில் 25 சதவீத மாணவிகளின் வங்கிக்கணக்குகள் மாணவிகள் பெயரில் அல்லாது பெற்றோர் பெயரிலும், ஜாய்ன்ட் அக்கவுண்டாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-
கல்லுாரி தரப்பில் மாணவிகள் பெயர், பாடப்பிரிவு, கல்லூரி செயல்படும் மாவட்டம், சேர்ந்த ஆண்டு ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பள்ளி தரப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது வங்கி சார்பில் வங்கிக்கணக்குகள், ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.இதில், மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரின் பெயரில் உள்ள கணக்குகளை இணைத்துள்ளனர். எங்கள் கல்லூரியில் 298 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டதில், 53 பேரின் விண்ணப்பங்களில் சிக்கல் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதே வங்கியில் மாணவிகள் பெயரில் கணக்கு துவங்கி, அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிலம் உள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் விவசாய நிதி தேவைக்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு வரும் 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரி பார்ப்பு பணிக்கு வழங்க வேண்டும்.
இப்பணி மொடக்குறிச்சி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் தோட்ட க்கலை உதவி இயக்குனர் மூலம் மேற்கொள்ள ப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவ லர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்பித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பே தங்களுக்கு நிலம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்