என் மலர்
நீங்கள் தேடியது "சட்டங்கள்"
- மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு.
- 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
கும்பகோணம்:
மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று கும்பகோணம் ஒருங்கி ணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களையும், பொது மக்களையும் பாதிக்கும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக 3 புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளமாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
- மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதன்மை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி உள்ளார்.
- சட்டங்களை முழு அளவில் அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நடப்பு ஆண்டு ஜூலை 1-ந்தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்தியாவில் சட்ட நடைமுறையை அதிக வெளிப்படை தன்மை, திறம்பட மற்றும் தற்கால சமூக தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் வகையில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றிய மறுஆய்வு கூட்டம் ஒன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடந்தது.
இதில், புதிய சட்டங்களானது பாதிக்கப்பட்ட மற்றும் குடிமக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவை என சுட்டி காட்டப்பட்டு உள்ளது. அந்த உணர்வுடன் அவை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறிய அமித்ஷா, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை சட்டங்களின் முன்னேற்றம் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று புஷ்கர் சிங் தமியை, அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோன்று அனைத்து தொடர்புடைய துறை அதிகாரிகளுடனும், வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதன்மை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி உள்ளார். தொழில் நுட்பம் மற்றும் பிற குறைபாடுகளை அரசு சரிசெய்து, இந்த புதிய சட்டங்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
அதிக எண்ணிக்கையிலான எப்.ஐ.ஆர்.கள் பதிவான பகுதிகள், காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் இந்த சட்டங்களை முழு அளவில் அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
- முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை எப்படி செய்வது என்பது குறித்து பேசினார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முதியோர் உதவி எண் 14567 பற்றியும், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சட்டம் 2007 பற்றியும் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு நல அலுவலர் ரவி பாலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்."