search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்டை தடுப்பு காவலர்கள்"

    • ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக சுரேஷ் (35), கணேஷ் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் சுரேசுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கணேசை அங்குள்ள முள் புதருக்குள் தூக்கி வீசியது. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த ஒற்றை யானை பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தமிட்டதை அடுத்துஅங்கு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிசாமி மற்றும் வனக்கா வலர்கள் அவர்களை மீட்டு, முதல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.

    பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    • மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது.
    • பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது. அந்த புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு டி-23 என்று பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன்பின்னரே கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் மற்றும் அது பதுங்கி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்காணித்து சிறப்பாக செயல்பட்டதற்காக முதுமலை புலிகள் காப்பக வனக்காப்பாளர் மீன் காலன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

    அதன்படி மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் வன அகாடமியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற புலிகள் தின விழாவில் முதுமலை வேட்டை தடுப்பு காவலர்கள் மீன் காலன், மாதன், பொம்மன் ஆகியோருக்கு மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் விருது வழங்கினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் கூறும்போது, பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.

    இதற்கு காரணமான அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த விருதால் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஊக்கம் ஏற்பட்டு உள்ளது என்றனர். முன்னதாக விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

    ×