என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்கட்டண உயர்வு"
- மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
- இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- முதலாவது கருத்து கேட்பு கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.
- மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலும் பாதிக்கப்படும்.
கோவை,
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதலாவது கருத்து கேட்பு கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் துறையினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
8 லட்சம் பேர் இந்த விசைத்தறி தொழிலை செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு போராடிய நாங்கள் தற்போது தான் கூலி உயர்வினை பெற்றுள்ளோம்.இந்த சமயத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது எங்களுக்கு வேதனையாக உள்ளது. மின்சாரம் கட்டணம் உயர்ந்தால் மீண்டும் செலவுகள் அதிகரிக்கும்.
ஏற்கனவே இங்கு வர வேண்டிய ஆர்டர்கள் அனைத்தும் குஜராத்துக்கு சென்று விட்டது. இதனால் மிக குறைந்த அளவிலான ஆர்டர்களே வருகின்றனர்.
தற்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விட்டால், எங்களிடம் வேலை பார்ப்பவர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு நாங்களே தொழில் செய்ய வேண்டும். இல்லையென்றால், விசைத்தறியை மூடி சாவியை அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம். தற்போதைக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறும்போது, கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான், எங்களது தொழில் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கே நாங்கள் பெரும் சிரமத்தை சந்தித்தோம்.
தற்போது மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால் தொழில் பெருமளவில் பாதிப்படையும். தொழில் நகரான கோவையில் தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும்.எனவே தற்போதைக்கு அரசு மின்சார கட்டணம் உயர்த்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.
மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, மோட்டார் பம்ப் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜாப்-ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலும் பாதிக்கப்படும். எனவே அரசு மின்கட்டணம் உயர்த்துவது தற்போதைக்கு வேண்டாம் என்றனர்.
- தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது.
- கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்