என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகுளத்தூர்"

    • முதுகுளத்தூரில் ஜமாபந்தி நடந்தது.
    • சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டம் மற்றும் தெற்கு உள்வட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் தீர்வாய தணிக்கையின் போது வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் பூ முருகன், வட்ட பொருளாளர் அய்யப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறையினர் கலந்து கொண்டனர்.

    • பல நூறு ஆண்டுகளாக கறி விருந்து நடைபெற்று வருகிறது.
    • கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை மக்கள் உபயோகப்படுத்துவதில்லை.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் கிராமத்தில் கடலாடி-முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது தர்ம முனீஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி விழாவையொட்டி பாரிவேட்டை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறு வது வழக்கம்.

    பாரி வேட்டை திருவிழா விற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்தப்ப டும். ஆடுகள் குட்டி போடும் போதே இது முனியனுக்கு என்று சொல்லி நேர்ந்து விடும் பழக்கம் இப்பகுதியில் உள்ளது.

    மேலும், கீழச்சாக் குளம் கிராமத்தின் சார்பில் தலைகட்டுவரியாக 2 ஆயிரம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கீழச்சிக்குளம் கிராம மக்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

    2 ஆண்டுக்கு ஒருமுறை பாரிவேட்டை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு தர்ம முனீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் ஆலய பாரிவேட்டை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொது அன்னதான விருந்து இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி பேதம் பாராமல் கலந்து கொண்டு கறிவிருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டுக்கறி விருந்து நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை இப்பகுதி மக்கள் உபயோகப் படுத்துவதில்லை. கோவில் பொருட்கள் அனைத்தும் தர்ம முனீஸ்வரருக்கு சொந்தம் என இப்பகுதி மக்கள் கருதுவதால், கோவில் ஊரணியைச் சுற்றியுள்ள மரங்களில் உள்ள இலை தழைகளைக் கூட தங்களது ஆடு, மாடுகளுக்கு அளிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மழைநீர் செல்ல புதிய குழாய் பதித்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் சேர்மன் ஷாஜஹான் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ஊழியர் ராஜேஸ் வரவேற்றார்.

    கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    மோகன்தாஸ் (7-வது வார்டு திமுக கவுன்சிலர்)

    சொத்துவரி, குடிநீர் வரி எவ்வாறு வசூலிக்கப்படுகிறது.இதர வருவாய் இனங்கள் குறித்த இணைப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தெரியவரும்.

    சேர்மன்:- தண்ணீர் வரி மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது.

    மோகன்தாஸ் (7வது வர்ர்டு):- பிளான்அப்ரூவல் எவ்வாறு வசூலிக்கப்ப டுகிறது?

    சேகர் (10-வது வார்டு):- பஸ் நிலைய கடைகள் எப்போது ஏலம் விடப்படும். சேர்மன்:- அதிகாரிகளின் காலத்தில் போர்டு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இப்போது 18 மாதங்கள்தான் முடிந்த நிலையில் மீதி 18 மாதங்கள் முடிந்தபின்பு முடிவு செய்யப்படும்.

    மோகன்தாஸ் (7வது வார்டு):- சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களை மிரட்டுகிறது. உடைந்த குழாயை அகற்றி உடனடியாக புதிய குழாய் பதித்து அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

    சேகர் (10 வது வார்டு கவுன்சிலர்):- பிரேத பரிசோதனை கூடம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? (சேர்மன்):- பேரூராட்சி 6-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது.

    உம்முதர்தா (12-வது வார்டு):- எங்கள் பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும். மோகன்தாஸ் (7-வது வார்டு):- கீழரதவீதியில் வாறுகால் அமைத்து கொடுக்க வேண்டும். காவிரி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமலட்சுமி:- மழைநீர் தேங்கியுள்ளதை அகற்ற வேண்டும்.

    பார்வதி:- கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×