என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷவர்மா"

    • ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இந்நிலையில்  திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    • இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலின் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த ஓட்டல்களில் கடந்த 30-ந்தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
    • உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    • ராகுல் டி.நாயர் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தீக்கோயி பகுதியை சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (வயது 22). இவா் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18-ந்தேதி ராகுல் மாவேலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஷவர்மா (இறைச்சி உணவு) ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

    மறுநாள் காலையில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    லுசாகா:

    தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர்கள் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட அவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனிடையே புகாரின்பேரில் ஷவர்மா விற்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ்.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ்(வயது28).

    இவர் நேற்றுமுன்தினம் மாலை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

    அதனை ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட போது ஒவ்வாமையால், அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் கெட்டுப்போன வாசம் வந்தது. இதனால் அவதிக்குள்ளான அவர், இதுகுறித்து நண்பர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் நண்பர்களுடன், தான் ஷவர்மா ஆர்டர் செய்த கடைக்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் ஆண்ட்ரூசுடன் கடையில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த கடையில் சாப்பிட்டிருந்தவர்கள் ஒன்று கூடவே பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காலாவதியான மசாலா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து, கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சி கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்தவர்களிடம் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவு பண்டங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

    ×