என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்மிருதி மந்தனா"
- சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது.
- 1976-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.
சென்னை:
தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் அவுட் எடுக்க முடியாமல் திணறினர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இதனால் முதல் நாள் மதிய இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 65 ரன்னிலும் மந்தனா 64 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. 1976-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. அது டிராவில் முடிந்தது. அதன் பிறகு இங்கு இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.
- 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இந்திய அணி 40.4 ஓவரில் 220 ரன்கள் எடுத்து வென்றது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 25 ரன், பிரியா புனியா 28 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
- முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 136 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை மந்தனா வீழ்த்தினார்.
பெங்களூரு:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசிய மந்தனா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. அந்த அணிக்கு 84 பந்துகளில் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது.
- மந்தனா 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- கவுர் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெங்களூரு:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ஷபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷபாலி வர்மா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேமலதா 24 ரன்னில் வெளியேறினார்.
இதனையத்து கேப்டன் கவுர்- மந்தனா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா சதம் விளாசி அசத்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மந்தனா 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய கவுர் கடைசி ஓவரில் சதம் அடித்தார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. கவூர் 103 ரன்னிலும் ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
- தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி உள்ளார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் சதம் அடித்தனன் மூலம் ஐசிசி-யின் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
மேலும் தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை சேர்ந்த அதப்பட்டுவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தை சேர்ந்த ரூத் ஸ்கிவர்-ப்ரண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது.
- தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணியின் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர். ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். தீப்தி ஷர்மா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. தீப்தி ஷர்மா 37 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 117 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- பேட்டிங் தரவரிசையில் ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
இதன் முதல் 3 இடங்கள் முறையே இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (807 புள்ளி), இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி), ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (717 புள்ளி) உள்ளனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் (677 புள்ளி) 2-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (675 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை.
ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் ( 452 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (360 புள்ளி) 2-ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (358 புள்ளி) 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் (347 புள்ளி) 4-ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (345 புள்ளி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
- பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
மும்பை:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
27 வயதான மந்தனா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் 'இன்ஸ்டாகிராமில் உங்களை நிறைய ஆண்கள் பின்தொடர்கிறார்கள். உங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், எந்தவிதமான குணாதிசயங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிரித்தபடி மந்தனா அளித்த பதிலில், 'இதுபோன்ற கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல பையனாக இருக்க வேண்டும். என் மீது அக்கறை உடையவராக, என் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.
நான் விரும்பும் இரண்டு குணங்கள் இது தான். நான் விளையாட்டில் இருப்பதால் அவரிடம் அதிக நேரம் செலவிட முடியாது. அதை புரிந்துகொண்டு என் மேல் மிகுந்த அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது தான் நான் முக்கியமாக பார்க்கக்கூடியது' என்று கூறினார்.
- ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
- மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார்.
மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 87 பேர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26 வரை நடைபெறுகிறது.
மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ஆடவர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்கள்.
From one No. 18 to another, from one skipper to another, Virat Kohli and Faf du Plessis announce RCB's captain for the Women's Premier League - Smriti Mandhana. #PlayBold #WPL2023 #CaptainSmriti @mandhana_smriti pic.twitter.com/sqmKnJePPu
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 18, 2023
இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட மந்தனாவுக்கு 6 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்