என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்மிருதி மந்தனா"
- முதலில் ஆடிய இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 136 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை மந்தனா வீழ்த்தினார்.
பெங்களூரு:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசிய மந்தனா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. அந்த அணிக்கு 84 பந்துகளில் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது.
- முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இந்திய அணி 40.4 ஓவரில் 220 ரன்கள் எடுத்து வென்றது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 25 ரன், பிரியா புனியா 28 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
- 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது.
- 1976-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.
சென்னை:
தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் அவுட் எடுக்க முடியாமல் திணறினர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இதனால் முதல் நாள் மதிய இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 65 ரன்னிலும் மந்தனா 64 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. 1976-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. அது டிராவில் முடிந்தது. அதன் பிறகு இங்கு இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.
- முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
- ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்துக்கு மந்தனா- ஹர்மன்பிரீத் கவுர் இடையே போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு இடங்கள் முறையே ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 87 போட்டியில் விளையாடி 3590 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். கவுர் 115 போட்டிகளில் விளையாடி 3589 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 1 ரன்னில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் மந்தனா சதம் விளாசினார்.
- மிதாலி ராஜ் 211 போட்டிகள் விளையாடி 7 சதங்கள் அடித்துள்ளார்.
அகமதாபாத்:
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என கணக்கில் தொடர் சமனில் இருந்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார். இது அவருக்கு 8-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய மிதாலி ராஜ் சாதனை மந்தனா முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் மந்தனா 8 சதங்களுடன் முதல் இடத்திலும் மிதாலி ராஜ் 7 சதங்களுடன் 2-வது இடத்திலும் கவுர் 6 சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மிதாலி ராஜ் 211 போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ளார். மந்தனா வெறும் 88 போட்டிகளில் 8 சதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.
- ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீராங்கனைகளின் விவரத்தை நேற்று வெளியிட்டது.
நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலிஸ் பெர்ரி உள்பட 13 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். டேனி வியாட் வர்த்தக பரிமாற்ற முறையில் உ.பி. வாரியர்ஸ் அணியில் இருந்து இழுக்கப்பட்டுள்ளார். ஹீதர் நைட் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமெலியா கெர், ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர் உள்பட 14 வீராங்கனைகள் நீடிக்கின்றனர். இசி வோங் உள்ளிட்ட 4 பேர் கழற்றி விடப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அனபெல் சுதர்லேண்ட் உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்திருக்கிறது. பூனம் யாதவ் உள்ளிட்ட 4 பேரை வெளியேற்றியுள்ளது.
உ.பி. வாரியர்ஸ் அலிசா ஹீலி, சமாரி அட்டப்பட்டு, தீப்தி ஷர்மா உள்பட 15 பேரை தன்வசமாக்கி இருக்கிறது. 4 வீராங்கனைகளை கழற்றிவிட்டுள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெத் மூனி, லாரா வோல்வார்ட், லிட்ச்பீல்டு உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்தது. சினே ராணா உள்பட 7 பேருக்கு கல்தா கொடுத்தது.
5 அணிகளும் மொத்தம் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் ஏலத்திற்கு வருவார்கள். ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைத்துள்ள வீராங்கனைகளுக்கான ஊதியம் போக மீதமுள்ள தொகை வைத்து அணிக்கு தேவையான எஞ்சிய வீராங்கனைகளை எடுக்கலாம். அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
- இந்தியாவின் மந்தனா 105 ரன்களில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்த்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ரிச்சா கோஷ் களமிறங்கினர். ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மந்தனாவுடன் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. தியோல் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் (105) அடித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் இந்தியா 45.1 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டி20 தரவரிசையில் 3-வது இடத்தை மந்தனா பிடித்துள்ளார்.
மகளிருக்கான டி20 மற்றும் ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20-யில் 1 இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேப்டன் கவுர் 2 இடங்கள் பின் தங்கி 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20-யில் 1 இடம் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20-யில் 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் 5-வது இடத்தையும் டி20 போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
- பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
315 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து களமிறங்கவுள்ளது.
இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.