search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 வாகனங்கள்"

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி
    • சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    கன்னியாகுமரி:
    குமரிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கனிமவளங்களை நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிகமாக கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடக்கிறது.

    கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வானத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கனிமவளங்களை அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? உரிமையாளர் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம்.
    • சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

    ஏற்காடு:

    தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம். இதனால் ஏற்காட்டில் வாடகை கார்,வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த சில மாதமாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஏற்காட்டில் உள்ள வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்காட்டில் ஒரு சிலர் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதால் வாடகை வாகனம் ஓட்டும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதுபோல் இருசக்கர வாகனங்களை சட்டத்துக்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் வட்டார போக்கு–வரத்து அதிகாரி, ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து உடனடியாக சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார். இந்த தணிக்கையில் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்கள் ஓட்டிவந்த 2 மோட்டார்சைக்கிள்களை ஆர்.டி.ஓ பறிமுதல் செய்தார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற வாகன தணிக்கையில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனத்தில் வாடகைக்கு ஓட்டியும் அதில் அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற கார் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் இல்லாத 4 கார்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதமும் விதித்தார்.

    ×