search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ ராசா"

    • மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது.
    • மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பினார். விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது என்று கூறிய அவர் தொடர்ந்து பேசியதாவது,

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

     

    இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது,

    மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்

    தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
    • அதானி குழும முறைகேடு பற்றி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.

    குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.

    அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது.

    பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.

    8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

    பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

    திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

    8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொருவரும் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது.

    பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால் இன்று நான் ராகுலுடன் அவையில் இருக்கிறேன். அதற்கு காரணம் பெரியார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 10 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

    தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 -பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33%-லிருந்து 20%ஆக குறைத்துவிட்டது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை 2 பேர் வாங்குகிறார்கள், 2 பேர் விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறீர்கள்.

    முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்தியர்கள்தான். முகலாயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றால், ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான்.

    அதானி குழும முறைகேடு பற்றி 50 நாட்கள் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.

    ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான்.

    அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்.

    அரசியல் சாசன சபையில் உயர்சாதியினர்தான் அமர்ந்திருக்கின்றனர் என்று சைமன் கூறினார். பாஜக அரசியல் சட்டத்தை பின்பற்றுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
    • நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    அருவங்காடு:

    இந்து மதம் பற்றி எதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.. சமீபத்தில் கூட இந்து கடவுளான ராமர் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். நாங்கள் ஒருபோதும் ரா மரை ஏற்க மாட்டோம், ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என பேசி இருந்தார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதுதொடர்பாக காங்கிரசாரே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஆ.ராசா எம்.பி. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார். அப்போது ஆன்மீகம் பற்றிய பேசிய அவரது பேச்சுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-

    என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது.

    நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுபோ.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆ.ராசாவின் பேச்சு குறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில் இதுவரை இந்து கடவுள்களுக்கு எதிராக ராசா பேசி வந்தார். தற்போது ஓட்டுக்காக அவர் பல்டி அடித்துள்ளார். கோத்தகிரியில் உள்ள கோவிலுக்கு கூட சென்று வந்துள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றனர்.

    • மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.
    • பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.

    தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது.

    மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும். பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர்.

    எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
    • நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

    • அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    கோவை:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.

    இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.

    • பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
    • மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


    தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை.
    • ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா கோவையில் நடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-


    இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை. ஒரு நாடு என்றால், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே பாரம்பரியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது நாடாக இருக்க முடியும். அதனால் இந்தியா ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம். தமிழ் ஒரு நாடு, மலையாளம் ஒரு நாடு, ஒடியா ஒரு நாடு. இந்த நாடுகள் அடங்கியதுதான் இந்தியா என்ற துணைக் கண்டம்.

    நீங்கள் ஒன்றைக் காட்டி, இது கடவுள், இது ராமர் என்பீர்கள். பாரத் மாதா கி ஜே என்பீர்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் ராமரை ஏற்க மாட்டோம். பாரத மாதாவையும் ஏற்க மாட்டோம். ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஆ.ராசாவின் பேச்சை ஏற்றுக் கொள்கிறீர்களா? ராகுல் காந்தி இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-


    ஆ.ராசாவின் பேச்சை 100 சதவீதம் நாங்கள் ஏற்க மாட்டோம். அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்.

    ராமரின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டான ஒன்றாகும். ராமர் என்றால் பெருமை, ராமர் என்றால் அன்பு, ராமர் என்றால் நேர்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    எனவே ஆ.ராசாவின் பேச்சை நாங்கள் முழுமையாக கண்டிக்கிறோம். அவரது பேச்சுக்கு எந்த ஆதரவும் இல்லை.

    இவ்வாறு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா கூறினார்.

    • ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தமிழை வளர்த்தனர். இவர்களை தாண்டி தற்போது மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை 200 பேர் நிர்வாணப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. ஏனென்றால் அந்த மாநில முதலமைச்சர் பா.ஜனதாவை சேர்ந்தவர்.

    பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை பிரதமர் கேட்டு இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும்.

    இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.

    நெல்லையில் நடந்த கூட்டத்தில் மோடி பேசும்போது, பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தி.மு.க. இருக்காது என்று கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. அதாவது தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் இந்தியாவே இருக்காது. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, துணைக்கண்டம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மொழி, மரபு உண்டு. அவற்றை காப்பதுதான் மத்திய அரசின் கடமை.

    ஆனால் ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது. அப்படி சட்டம் இல்லை என்றால் இந்தியாவே இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
    • மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள்.

    கோவை:

    அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

    தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து ஆ.ராசா எம்.பி.யிடம் கோவையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளித்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-


    எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள்.

    அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக ஐகோர்ட்டில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பழனிசாமி கூறுகிறார். அது தனிக்கதை. அதைப்பற்றி பின்னர் தனியாக பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
    • தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    அவினாசி:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சித்து பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அவரது தொகுதியான நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள்தான் தி.மு.க.வினர். அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசிய அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார்.

    50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ. 1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணியை முடிக்காமல் 2½ ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடுமையான மின் கட்டண உயர்வால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டங்களுக்கு தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். நாளை மறுநாள் 11-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.

    கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., பாதுகாப்பில்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    2019, 2021 தேர்தல் அறிக்கையை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார்கள் . அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள். இது தி.மு.க.வின் இரட்டை வேடம். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு.

    திருப்பூர் என்றாலே அந்நிய செல்வாணியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.

    ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக, அரசு இருக்கின்றது. தி.மு.க.வினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும்.

    எம்.ஜி.ஆரை பற்றி பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சித்தால் இதுதான் தண்டனை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி., வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தனபால், வி.பி.கந்தசாமி, கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அவினாசியில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி அவினாசியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    * நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அ.தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    ×