search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜ்ரங் புனியா"

    • 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியது அரசியல் சதி
    • பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடந்த வருடத்தின் தொடக்கம் முதல் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்பிய வினேஷ் போகத் சக வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரசில் இணைந்துள்ளார். எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் வினேஷ் போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், 2 வருடங்களுக்கு முன்பு இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கிய போதே இது முழுக்க முழுக்க அரசியல் சதி என்றும் காங்கிரசால் இயக்கப்படும் போராட்டம் என்றும் நான் கூறி வந்தேன்.குறிப்பாக இதில் [அரியானா முன்னாள் முதல்வர்] பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா,ராகுல் மற்றும் பிரியங்காவின் சதி.

    பஜ்ரங் மற்றும் வினேஷ் ஆகியோர் பெண்களின் மதிப்புக்காகப் போராடவில்லை அரசியல் ஆதாயத்துக்காகவே போராடினர். தற்போது அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் இது தெளிவாகியுள்ளது. அரியானாவின் புதல்விகளுக்கு அவர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.அவர்கள் அரியானாவில் எந்த தொகுதியில் நின்றாலும், ஒரு சிறு பாஜக வேட்பாளரே அங்கு வெல்ல போகிறார்.

    ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்.எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிலையில் அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. .

    காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதையடுத்து காங்கிரசில் இணைந்த சேர்ந்த சில மணி நேரங்களிலேயே பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    • இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்
    • ''நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோவுக்கும் கூடுதலாக 100 கிராம் எடை அதிகரித்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரிய அவரின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவில் தனது கிராமத்தில் ஓய்விலிருந்த வினேஷ் போகத் அரியானா பஞ்சாப் இடையே அமைந்துள்ள ஷம்பு எல்லையில் பயிர்களுக்கு ஆதார விலை கோரி 200 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அரியானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வினேஷ் போகத் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் நேற்று முன் தினம் சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்நிலையில் இன்று இந்திய ரெயில்வேவில் வடக்கு ரெயில்வே சிறப்பு அதிகாரியாகத் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவுடன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார்.

    தனது சொந்த காரணங்களுக்காக ரெயில்வே பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரின் செயலுக்கு விளக்கம் கேட்டு ரெயில்வே ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், வினேஷுக்கு வாட்ஸப்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன, வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை சந்தித்ததை ஊடகங்கள் பெரிதாக காட்டியபிறகே இவ்வாறு நடந்துள்ளது. நாட்டின் எத்ரிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதும் குற்றமாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரசில் சேர்ந்தது குறித்து பேசிய வினேஷ் போகத், நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், [கடந்த வருடம் போராட்டத்தின்போது] நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்காக முன்வந்து சண்டையிடும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன் என்று தெரிவித்துளார். கடந்த வருடம் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்க்காட்டை விசாரிக்கக்கோரி 6 மதஹக்லாமாக நடந்த போயிராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.    

    • தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தனது ரெயில்வே பணியை வினேஷ் போகத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை இன்று ராஜினாமா செய்த வினேஷ் போகத், வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தெரிவித்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினேஷ் போகத், பஜ்ரங் புனியா நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
    • அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ர்ங் புனியா சந்திப்பு மூலம் கடந்த வருடம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    போராட்டங்களின்போது நமது விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் ஒரு இணைப்பு உள்ளது என்பதாகும். அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக உள்ளது.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிங்கு எதிராக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் இளம் ஜூனர்ய மல்யுத்த வீராங்கனைகளுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.

    • அரியானா சட்டமன்ற தேர்தல் வினேஷ் போகத் பேட்டியிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
    • தற்போது ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

    இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினோஷ் போகத். அதன்பின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா வந்ததும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில்தான் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்துள்ளனர்.

    இதன்மூலம் அரியானா தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வியாழக்கிழமை (நாளை) இந்த கேள்விக்கு தெளிவு கிடைத்தும் என பதில் அளித்திருந்தார்.

    நேற்று பபாரியா இவ்வாறு தெரிவித்த நிலையில் இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

    மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினோஷ் போகத் ஆவார்கள்.

    • வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்தது.
    • உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள்.

    வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் நுழைந்த அவரது பதக்க கனவு கலைந்தது.

    இதுகுறித்து சக மல்யுத்த வீரரும், டோக்கியோ ஒலிம் பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா கூறியதாவது:-

    இந்த இருளில் உங்கள் (வினேஷ் போகத்) பதக்கம் பறிக்கப்பட்டதாக நான் நம்புகிறேன். நீங்கள் இன்று உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள். உலக சாம்பியன் இந்தியாவின் பெருமை. நீங்கள் நாட்டின் கோஹினூர் வைரம். பதக்கம் வாங்க விரும்புபவர்கள் அவற்றை ஒவ்வொன்றையும் ரூ.15-க்கு வாங்கலாம்.

    இவ்வாறு பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

    இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்
    • வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.

     

    முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

     

    இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

     

    முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.  

     

    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
    • இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்

    இந்நிலையில், வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வினேஷ் போகத் , பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
    • இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடியவர்.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா.

    இவர், இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்.

    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    ×