search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டாட்சியர்"

    • வட்டாட்சியர் காருக்கு வைக்கப்பட்ட தீயை அதிகாரிகள் அணைத்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிருத்விராஜை கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தாயின் புகாரை போலீசார் ஏற்க மறுத்த விரக்தியில், வட்டாட்சியரின் வாகனத்தை பிருத்விராஜ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிருத்விராஜை கைது செய்தனர்.

    அவர் மீது அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், வாகனத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிருத்விராஜ், கடந்த ஜூலை மாதம் காணாமல் போனதாக அவரது தாயார் போலீசாரிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு திரும்பிய பிருத்விராஜ் ஜூலை 23 அன்று தனது தாயாரின் புகார் தொடர்பாக போலீசாரிடம் பேசுவதற்கு சென்றுள்ளார்.

    அப்போது, ஆகஸ்ட் 14ம் தேதி, விதான சவுதா அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததற்காக பிருத்விராஜ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்?
    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா?

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்றவேண்டும் என்றும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டை குவளை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் சில தனியார் திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம கலக்கப்படவில்லை எனவும் அதில் பாசி தான் கலந்துள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல இரட்டை குவளை முறை போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், "இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

    சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    பின்பு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், மாட்டுச்சாணம் கலப்பு வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் புத்தகம் வழங்கினார்.
    • வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது. புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேசுவரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி அருகே மனுநீதி முகாம் நடந்தது.
    • துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி தாலுகா தொட்டப்பநாயக்கனூரில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    உசிலம்பட்டி வட்டாட்சியர் கருப்பையா, துணை வட்டாட்சியர் லோகேஸ்வரி, சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், ரம்யா, நர்மதா, துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    ×