search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணிய சுவாமி கோவில்"

    • கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
    • பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிச னம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகியது.

    வழக்கம் போல் கோவிலில் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை போக்கு வரத்து போலிசார் திருச்செந்தூர் நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
    • வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    • சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியது.

    திருச்செந்தூர், ஜூன். 16-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

     அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான திருமணங்கள் இன்று கோவிலில் நடைபெற்றது.

    விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் இன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.* * *திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    • வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நெல்லையில் இருந்து மூலைகரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மெஞ்ஞானபுரம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்கள், உள்ளூர் பக் தர்கள் சுவாமியை எளிதாக தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இன்று காலையில் சங்கரன்கோவில் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 

    • அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.

    அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். 

    • கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763, ஆவணி திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ.25 ஆயிரத்து 520, மேல கோபுர திருப்பணி உண்டியல் மூலம் ரூ.875, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89, கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113, நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.

    இதுபோக தங்கம் 2 கிலோ100 கிராம், வெள்ளி 19 கிலோ, பித்தளை 35 கிலோ, செம்பு 4 கிலோ, தகரம் 3 கிலோ, மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர்.
    • இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

    தல வரலாறு:

    நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் "பெரும்வெளிர்' இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். "ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்", என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு "தண்டாயுதபாணி" என்ற திருநாமம் இட்டனர்.

    தம்பிக்கு முதல் பூஜை:

    எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவுக்கென தனித்தேர் உள்ளது. நொய்யல் ஆறு, சென்னிமலையிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் ஓடுகிறது. கோவிலின் தென்புறம் உள்ள மாமாங்க தீர்த்தம், கோடையிலும் பொங்கி வழியும். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்:

    "துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை" என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்" , "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோவில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபா ராதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அலைவாயு உகந்த பெரு மான் சப்பர த்தில் வீதி உலா நடக்கிறது.

    தைப்பூசம்

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    தங்க மயில் வாகனத்தில் வீதி உலா

    மதியம் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயு உகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    • மருத்துவ முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
    • பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். துளீர் அமைப்பு சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி டாக்டர் தர்மராஜ் செல்லையா தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கண்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன், முனைப்பு அலுவலர் புலவர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    • சூரிய கிரகணத்தால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    முருக பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை‌ திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கின்றது.

    தொடர்ந்து சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடத்தப்பட்டு, வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

    இன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மற்றபூஜைகள் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது.

    31-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்சசியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்துள்ளனர்.

    ×