என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழாய்"

    • மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
    • பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மேட்டுப்பாளையத்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

    அவினாசி :

    அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய த்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பூமிக்குள் ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் நேற்று கருணை பாளையம் பிரிவு அருகே பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

    இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து குழாய் உடைப்பை சரிசெய்தனர்.

    • நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.
    • மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

    அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்

    தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர்.
    • மீண்டும் கச்சா எண்ணை குழாயில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2-ம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது.

    குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்–களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால், நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.

    இதனிடையே கச்சா எண்ணை குழாய்யில் நேற்று பராமரிப்பு பணிகள் நடை பெற்றது. அப்போது குழாய்யில் பம்பிங் செய்ததால் கச்சா எண்ணையுடன் கலந்த தண்ணீர் வானுயரத்தில் பீய்ச்சி அடித்து கடலில் கலந்தது. இதைத் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீண்டும் கச்சா எண்ணை குழாய்யில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சி.பி.சி.எல். நிர்வாகம் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து சி.பி.சி.எல். அதிகாரிகள் கூறுகையில் குழாயை சுத்தம் செய்யும் பணியின் போது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணை செலுத்த வில்லை என்றும் தெரிவித்தனர். மீண்டும் பட்டினச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.
    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையில் உள்ள மணலூரில் குழாய் விரிசல் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    மணலூர் வைகை ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீரேற்று நிலையம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

    ஊழியர்கள் மரகுச்சிகளை வைத்து சரி செய்தனர். தற்போது குடி நீரேற்று நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மீண்டும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பனை மர உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. நான்கு வழிச்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறியதை பார்த்து பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாகியதாக தெரிகிறது.

    கோடை உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
    • கழிப்பறை உள்ள இடத்தில் ‘செப்டிக்டேங்’ அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.

    தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவுநீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது.

    ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சாதிபாகுபாடு காரணம் என்றும் கூறப்படுகிறது. இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.

    தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதனால் வேறு வழியின்றி மாற்றுப்பாதையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனினும் மாற்றுப்பாதையில் குழாய்கள் பதித்தால் மேடான பகுதி வாரியாக கழிவு நீர் பாய்ந்து செல்வதில் சிரமம் ஏற்படும் சிக்கலும் உள்ளது.

    இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'தாழங்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்து குழாய் பதிப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷ்னரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரி உள்ளோம்.

    விரைவில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.

    இது குறித்து தாழங்குப்பத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'நான் பிறந்த முதலே இங்கு தான் வசிக்கிறேன். நெட்டுக்குப்பத்தில் உள்ள சிலர் கழிவுநீர் குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூமிக்கடியில் குழாய் சென்றாலும் தங்கள் பகுதி வழியாக குழாய் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாதிய அவதூறுகளை கூறுகிறார்கள்' என்றனர்.

    மற்றொருவர் கூறும் போது, 'இந்த கழிவறை மிகவும் பழமை யானது. கடந்த 3 ஆண்டு முன்பு இதனை சீரமைக்க தொடங்கியதும் பிரச்சினை ஏற்பட்ட ஆரம்பித்தது. முன்பு கழிவறை அருகே வீடுகள் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. தற்போது நெட்டுக்குப்பம் அருகே கழிப்பறை பக்கத்தில் ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. இதனால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுக்கழிப்பறை இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்' என்றார்.

    இதற்கிடையே கழிப்பறை உள்ள இடத்தில் 'செப்டிக்டேங்' அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • 24 களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
    • நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேதாரண்யம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மகாராஜபுரம் பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மேற்கொள்வது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்வது, நகராட்சி பகுதியில் பயன்பாடுகள் இல்லாத கழிவறை கட்டிடங்களை அகற்றுவது, நகராட்சியில் சாலையோரம் வளரும் புற்களை வெட்டு வதற்கு புல் வெட்டும் எந்திரம் வாங்குவது, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 24 டெங்கு களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்துவது, நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.
    • நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் மருதூர் கடைத்தெருவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆயிரக்கணக்கான லிட்டர் செல்லக்கேன் ஆற்றில் வீணாக செல்கிறது.

    தற்போது கோடை காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர்சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×