search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி"

    • 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.
    • ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக இணையத்தில் டிரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்சய் குமார், 90 ஸ் கிட்ஸ் -களின் பிரியத்துக்குரிய டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் உள்ளது காமெடி அல்ல வன்முறை என்று தெரிவித்துள்ளார்.

    கேல் கேல் மெய்ன் என்ற புதிய படத்தின் அக்சய் குமார் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆகா கல்யாணம் புகழ் வாணி கபூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சக நடிகர் பரீத் கான், தனக்கு டாம் அண்ட் ஜெரி மிகவும் பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார் .

    அப்போது இடைமறித்த அக்சய், டாம் அண்ட் ஜெரி என்பது காமெடி அல்ல அது வன்முறை, இன்று உங்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நான் நடித்த படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் டாம் அண்ட் ஜெரியில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

     

     ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் உள்ள பிரபல காட்சிகள் டாம் அண்ட் ஜெரியை ஒத்திருப்பதாக சமீப நாட்களாக இணையத்தில் விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்தார் ராஜமௌலி
    • இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

    இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

    இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

    ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவண படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் ராஜ மவுளி எப்படி கதையை அணுகுகிறார் மற்றும் ஒரு காட்சி அமைப்பிற்காக எவ்வளவு மெனெக்கெடுகிறார் என்ற காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
    • ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி

    தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

    இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

    இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

    ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி தற்பொழுது வெளியாகி கோடிகளை அள்ளும் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

    மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு மாபெரும் படைப்பை அடுத்து இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம்.
    • பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது,

    இந்திய சினிமா இயக்குனர்களுள் மிக முக்கியமானவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல் ஸ்டோன் என்று சொல்லலாம். 1000 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    முன்னதாக, பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,

    'பிரபாஸ் மிகவும் சோம்பேறி, 'திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்'. என்று மிகவும் கிண்டலாக கூறினார்.

    சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியதாவது, 'சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது. இந்த மூன்று பிரச்சினைகள் எனக்கு உள்ளன. நான் நிஜ வாழ்க்கையில்தான் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை'. என கூறினார்.

    பிரபாஸ் தற்பொழுது கல்கி 2898 ஏடி படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 அம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
    • இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது

    கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
    • ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.

    இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

    'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
    • மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

    இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஊருக்குள் வந்த பாகுபலி யானை பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
    • வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது.நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளித்த அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    இது பெரும்பாலும் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் பாகுபலி யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாயில் காயம் ஏற்பட்டது. எனவே அதற்கு சிகிச்சை அளிப்பது என கால்நடை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக அந்த யானையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் பாகுபலி சிக்கவில்லை.

    இதற்கிடையே யானைக்கு வாயில் இருந்த காயம் தானாகவே சரியாகி விட்டது. எனவே பாகுபலி யானையை பிடிக்க வேண்டாம் என மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர்.

    இதனை தொடர்ந்து காட்டுயானை பாகுபலி வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகு அந்த யானையை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் பாகுபலி யானை 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்புக்கு வந்தது. அங்கு இருந்த பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.

    இதனை தற்செயலாக பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • யானையை கண்காணிக்க பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.
    • யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிகிறது.

    இந்த யானை அதிகாலையில் வனத்தை விட்டு வெளியேறி சமயபுரத்தில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதம் செய்கிறது. பின்னர் மாலையில் மீண்டும் வனத்திற்கு சென்று விடுகிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானை அவுட்டுக்காயினை கடித்து வாயில் காயத்துடன் சுற்றி திரிவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு குழுவிற்கு 6 பேர் வீதம் 2 குழுக்களை அமைத்த பாகுபலி யானையை தீவிரமாக கண்காணித்தனர்.

    ஆனால் யானை வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதகுற்ற செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க கோவை சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறும்போது,

    வன ஆர்வலர்கள் கூறு வது போல் பாகுபலி யானை அவுட்டு காயினை கடித்திருந்தால் தசைப்பகுதி கிழிந்திருக்கும். அதன் நடமாட்டம் குறைந்திருக்கும். ஆனால் தற்போது யானை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

    இந்த காயம் இரு யானைகளுக்கு இடையேயான மோதலில் ஏற்பட்ட காயம். யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் யானையினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
    • இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் "பாகுபலி" கட்டப்பா பாணியில் இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    காஜல் அகர்வால்

    பாகுபலிக்கு தான் அடிமை என்பதை குறிக்கும் வகையில் கட்டப்பா, பாகுபலியின் காலை தனது தலையில் வைப்பார். அது போன்று தன் குழந்தையின் காலை காஜல் அகர்வால் தன் தலை மீது வைத்து, " ராஜமவுலி சார்.. இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    ×