என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2பேர் கைது"

    • திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அருகே இருந்த விலை உயர்ந்த மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் திரு.பட்டினம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டாரர்களே பறிமுதல் செய்து காரைக்காலில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
    • ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.

    நிலக்கோட்டை:

    மதுரை மாவட்டம் கோசி கடை பகுதியை சேர்ந்த வர் தங்கராசு (வயது 51). இவர் மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி சவுடம்மன்கோவில் பகுதியில் போலி மலபார் பீடி விற்கப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது அங்கு திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த காஜா முகைதீன் (வயது 54) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (வயது 52) ஆகிய 2 பேரும் ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.

    உடனே கையும் களவுமாக பிடித்து விளாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரனிடம் ஒப்படைத்து கொடுத்த புகாரின் படி 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட சப் -இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது23), விஜயகுமார்(29) ஆகிய இருவர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, மணிகண்டன், விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×