என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடி போதை"
- 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது.
காங்கேயம் :
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், கார், பஸ்சை நிறுத்தி போதையில் அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயத்தில், திருப்பூர் செல்லும் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். போலீசாரிடம் திமிறிய போதை பெண், அங்கு வந்த காரை நிறுத்தி, சாவியை பறித்தார். அவ்வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டார். காங்கேயம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த பெண் திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது. அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
- குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
- அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சக்திவேல்ராஜா, (வயது 54) சமையல் மாஸ்டர்.
இவர் நேற்று இரவு தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (48). கட்டிட கூலி வேலை செய்பவர் சக்திவேல்ராஜா, குழந்தைசாமியிடம், தனக்கு வேலை எதாவது கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.
குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.
இதனால் சக்திவேல்ராஜா பலத்த காயமடைந்த நிலையில் குமாரபாளையம் அரச ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சக்திவேல்ராஜா குமார–பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்–பதிவு செய்து குழந்தைசாமி போலீசார் கைது செய்தனர்.
- அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம்.
- அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 40) விவசாயி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அருள் செல்வம் அவரது மனைவி மஞ்சமாதாவுடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று அதே பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை அருள் செல்வம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் செல்வம் தனது வீட்டின் முன்னாள் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவி சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அருள் செல்வம் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அருள் செல்வம் மனைவி மஞ்சமாதா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்