என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாஷ் சோப்ரா"

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளை 7 என்ற டோனியின் ஜெர்சி நம்பரை வைத்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதற்கு டோனி ரசிகர்கள் thala for a reason என கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இந்திய முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி உள்ளது. இந்த 7 பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் இந்தியாவில் தொடர்ச்சியாக 7 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது என கூறி 7 for some reason என கூறி வருகின்றனர். இது டோனி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.

    இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

    இதே போல முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், அஸ்வின், சஞ்சய் பங்கர், தீப் தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெறு அணிகள் குறித்து கணித்துள்ளனர்.

    இந்திய வீரர்கள் கணித்துள்ள அணிகள்:-

    முரளி விஜய்- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    ஆகாஷ் சோப்ரா- இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா

    சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    தீப் தாஸ்குப்தா- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

    அஸ்வின் - இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர்.

    தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

    இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது.

    அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்‌ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர். 

    அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ×