என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆகாஷ் சோப்ரா"
- நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
- இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வீராட் கோலி தங்களை திசை திருப்பும் முயற்சியாக போலியாக பீல்டிங் செய்ததாக வங்காளதேச வீரர் நூருல்ஹசன் குற்றம் சாட்டி இருந்தார்.
அக்ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை லிட்டன்தாஸ் அடிக்க பவுண்டரி லைன் அருகே நின்ற அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து வீச விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதை பிடித்தார். ஆனால் இடையே நின்றிருந்த விராட் கோலி பந்து தன்னை கடக்கையில் அதை பிடித்து பந்து வீச்சாளர் பகுதியை நோக்கி எறிவது போல் பாவனை காட்டினார்.
ஆனால் கோலியின் அந்த செயலை வங்காளதேச பேட்ஸ் மேன்களான லிட்டன்தாசும், நஜ்குல ஹூசைனும் கவனிக்காமல் 2 ரன்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் நூருல்ஹசன் மைதான நடுவர்களை விமர்சித்துள்ளார்.
நடுவர்கள் அதை முறையாக கவனித்து இந்திய அணிக்கான தண்டனையாக வங்காள தேசத்துக்கு 5 ரன்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும் என்றும் கூறினார்.
ஐ.சி.சி. விதிப்படி போலியான பீல்டிங் பாவனையால் பேட்ஸ்மேன்கள் திசை திருப்பப்பட்டதாக நடுவர்கள் கண்டறிந்திருந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்குவர். ஆனால் கோலியின் பாவனை நடுவர்களால் கவனிக்கப்படவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்கள் அந்த செயலால் திசை திருப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலி 100 சதவீதம் போலியான பீல்டிங்தான் செய்தார் என்றும் அவர் தவறு செய்துவிட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100 சதவீத போலி பீல்டிங்தான். பந்தை பிடிக்காமலேயே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக தான் 'துரோ' எறிவது போல் ஆக்ஷன் செய்தார். நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது. எனவே நாம் தப்பித்தோம். இந்த விஷயத்தில் வங்காள தேச வீரரின் குற்றச்சாட்டு சரியானவைதான்.
இவ்வாறு சோப்ரா கூறி உள்ளார்.
- ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர்.
தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.
இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது.
அவர் மட்டுமின்றி அக்ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.
அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்