என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 பேர் கைது"

    • தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் 129 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு பேரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர்.

    அப்போது வெள்ளோடு அடுத்த ஞானிபாளையம், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் என மொத்தம் 129 பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பங்களாபுதூர், சென்னி மலை, அம்மாபேட்டை, வீரப்பன்சத்திரம், தாலுகா, சூரம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடத்தல் கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். வேட்டவராயன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு நின்றிருந்தவர்களிடம் ஒரு கும்பல் பேசி கொண்டிருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் போடியை சேர்ந்த முத்துராசு, வினோத்குமார், மயிலாடும்பாறையை சேர்ந்த பாலமுருகன், ஜெகன், கலைவிநாயகர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜோதி என்ற பெண்ணையும் ேபாலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் போடி தாலுகா போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஈஸ்வரன், அஜித் பாண்டியன், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த 2 கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர். யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வேறு எங்கும் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளனரா என்பதை மோப்பநாய் கொண்டு தேடி வருகின்றனர்.

    ×