என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி பலி"

    • இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    சென்னிமலை

    சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (68). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி யில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஈங்கூர் ரோட்டில் வந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனை பிடித்து விசாரித்து வரு கிறனர்.

    • நாமகிரிபேட்டைக்குச் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சடையன் என்கிற சரவணன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). தச்சுத் தொழிலாளி.

    இவர் நேற்று இரவு நாமகிரிபேட்டைக்குச் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் நாமகிரிப்பேட்டை-ராசிபுரம் சாலையில் உள்ள நாமகிரிபேட்டை அரசு பள்ளி, மெக்கானிக் பட்டறை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ×