search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேக் ஹசீனா"

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இந்தியாவில் இருந்கொண்டு கருத்து தெரிவிப்பதை நல்லதல்ல எனக்கிறார் முகமது யூனுஸ்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அரசியல் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருக்க விரும்பினால் அமைதியாக இருக்க வேண்டும் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகமது யூனுஸ் கூறியதாவது:-

    வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தொடர்ந்து அவரை வைத்திருக்க விரும்பினால், அவர் அமைதியாக இருக்க வேண்டும். இது நிபந்தனையாக இருக்கும்.

    இந்தியாவில் இருந்து கருத்து தெரிவிப்பது நட்பற்ற சைகையாகும். இந்தியாவில் இருந்து அவர் கருத்து தெரிவிப்பது யாருக்கும் வசதியானது அல்ல. ஏனென்றால் அவரை நாங்கள் மீண்டும் வங்கதேசத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவர் இந்தியாவில் இருக்கிறார், சில சமயங்களில் அவர் கருத்து தெரிவிக்கிறார். இது பிரச்சனையாக இருக்கிறது.

    அவர் அமைதியாக இருந்திருந்தால் நாங்கள் மறந்திருப்போம். அவர் தன் சொந்த உலகத்தில் இருந்திருப்பார் என மக்கள் அதை மறந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அமர்ந்து கொண்டு, பேசிக்கொண்டு இருப்பதோடு அறிவுரைகள் கொடுத்து வருகிறார். இது யாருக்கும் பிடிக்காது.

    ,இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    • உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.
    • கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள்.

    இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் இடைக்கால அரசின் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹொசைன் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பாக பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை. உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.

    இந்த கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

    அது இந்திய அரசாங்கத்திற்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவ்விவகாரத்தை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதே எங்களின் கொள்கையாகும். யாருடனும் பகைமை கொள்ளாமல், சமநிலையான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளோம். எங்களது முதன்மைப் பணி நமது நலன்களைப் பாதுகாப்பதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார்.
    • ஷேக் ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்,

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

    இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார். ஷேக் ஹசீனாவை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    இதற்கிடையே இந்தியாவில் உள்ள 2 வங்கதேச தூதர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லியில் உள்ள வங்காள தேசத்தின் உயர் அலுவலகத்தில் பணியாற்றும் செயலாளர் ஷபான் மஹ்மூத் தனது ஒப்பந்தம் முடிவதற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதே போல கொல்கத்தாவில் உள்ள வங்காளதேசத்தின் தூதரகத்தின் முதன்மை செயலாளர் ரஞ்சன்சென் என்பவரும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு 2026-ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஷேக் ஹசீனா அரசாங்கத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் இவர் மீது குற்றாச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

    ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேச போராட்ட வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டோர் பலி.
    • ஐ.நா.-வின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளும் இடைக்கால அரசு.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதன்காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது.

    என்றாலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அவரின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அக்கட்சியை சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.

    இதனால் ஷேக் ஹசீனா பதவி விலகியதற்குப்பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் வங்கதேசம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிஃப் நஸ்ருல் கூறும்போது "போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.
    • முஜிபுர் ரஹ்மான் சிலையில் சிறுநீர் கழித்து அவமானம் செய்தனர்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.

    ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் செல்வாரா? இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பாரா? இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்குமா? என்பதற்கு விடை கிடைக்காமல் உள்ளது.

    இதற்கிடையே ஷேக் ஹசீனா கடந்த வாரம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் வன்முறை முடிவுக்க வந்த பாடில்லை.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக வங்கதேச வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா வங்காளதேச வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். வங்கதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
    • முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் வங்கதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பிச்சென்ற பின் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி பின்னரும், அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் கடந்த வாரம் திங்கட்கிழமை பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் ஏற்பட்ட வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வன்முறையில் அந்நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும்படி குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்டை நாடான இந்தியா வங்கதேசத்தில் இருந்து தப்பியோடி வரும் நபர்களை ஊடுருவ விடாமல் தடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வங்கதேச வன்முறை தொடர்பாக இந்தியா சர்வதேச அளவில் இந்த பிரச்சனையை எழுப்ப ணே்டும் என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எந்த சமூகமும் பாதிக்கப்படக் கூடாது. அது மெஜாரிட்டி சமூகம் அல்லது மைனாரிட்டி இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், எந்த மதப்பிரினரும் என இருந்தாலும் வங்காளதேசத்தில் வன்முறைக்கு பாதிக்கப்படக்கூடாது.

    மனித உரிமை பாதுகாப்பு என்ற வகையில் இந்தியா இந்த பிரச்சனையை சர்வதேச அளவில் வலுவாக எழுப்ப வேண்டும். நமது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு இது முக்கியமான பிரச்சனை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    காலத்தின் சோதனைக்கேற்ப சரியோ தவறோ, பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் வன்முறைப் புரட்சிகள், ராணுவப் புரட்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடந்தேறியுள்ளன என்பதற்கு உலக வரலாறு சாட்சி.

    ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்த சக்தியும் நாட்டை உள்நாட்டிலும் வெளியிலும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர்.
    • சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனையடுத்து, வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேட்டியளித்தார்.

    அதில், "முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதை தான் செய்தது. இந்த விஷயத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பதும் தான்.

    வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்" என்று சசி தரூர் தெரிவித்தார்.

    • வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
    • தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். அதை அனுமதிக்காமல் நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்.

    செயின்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும்.

    எனது மண்ணின் மக்களிடம், தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளன என்ற செய்திகளைப் பார்க்கும்போது என் இதயம் கண்ணீர் வடிக்கிறது.

    எனது தந்தையும் என் குடும்பத்தினரும் பாடுபட்ட உருவாக்கிய தேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
    • ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.

    வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடமைகள், கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் பேரணி நடந்தது. இதில் லட்சகணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் இந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறும்போது, `வங்காள தேசத்தில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள அரசாங்கத்துடனும் பேசுகிறோம்.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை கேட்கிறோம். இந்த அவமானமும், இனப் படுகொலையும் நிறுத்தப் பட்டு, அனைத்து கோவில்களும் பாரம்பரியமாக பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்தன.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உபைதுல் ஹாசன் பதவி விலக கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து சுப்ரீம் கோாட்டின் தலைமை நீதிபதியாக சையத் ரெபாத் அகமது என்பவரை அதிபர் முகமது ஷஹாபுதீன் நியமித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கோபால்கஞ்சில் அவாமி லீக் கட்சி பேரணியில் நடந்த மோதலின் போது 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபின் போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
    • இந்து கோவில்கள், வீடுகள், வணிக தொடர்பான இடங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த மாதம் 2-வது வாரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்க போராட்டம் தணிந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக வெடித்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினமா செய்தார். அதன்பின் போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். அங்கு வாழும் இந்துக்களை தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை நின்றபாடில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வன்முறைக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆகஸ்ட் 5-ந்தேதி கவிழ்ந்தது. அதில் இருந்து வங்காளதேசத்தின் 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் மைனாரிட்டி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோட முயற்சி செய்கிறார்கள்.

    வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய, இந்தப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கமாக பணியாற்றும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.

    துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்குமாறு பிடன் நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என மிட்சிகன் பாராளுமன்ற உறுப்பினரான தானேதர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏராளமான இந்து கோவில்கள், வீடுகள், வணிகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவாமி லீக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்னர்.

    ×