search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர் விமான நிலையம்"

    • பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம்.
    • சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கியது.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.

    காஞ்சிபுரம்

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.

    இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.

    இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.

    • மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்து 9.7.2024-ம் தேதி பரிந்துரைத்து உள்ளது.

    புதுடெல்லி:

    சென்னையில் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது.

    இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது.

    மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

    இது தொடர்பாக எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-

    பசுமைவெளி விமான நிலைய கொள்கை 2008-ன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசின் டிட்கோ சார்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைகளுக்குப்பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை வைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்த வழிகாட்டுதல் குழு, பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்து 9.7.2024-ம் தேதி பரிந்துரைத்து உள்ளது.

    பசுமைவெளி விமான நிலைய கொள்கைகளின்படி, நிதியளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவை சார்ந்தது.

    இவ்வாறு மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு தனது பதிலில் கூறினார்.

    • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
    • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு தேவையான நிலம் விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமமக்கள் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 705-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. அதிகாரிகள் கிராமசபை கூட்டம் நடத்தவராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏகனாபுரம் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் வருகிற 3-ந்தேதி(புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்து உள்ளது. ஏகனாபுரத்தை அதிகாரிகள் புறக்கணித்து உள்ளனர். நாங்கள் தான் விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். 6 முறை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இப்போது அதிகாரிகள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து உள்ளனர். எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. எங்களை புறக்கணிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தை அழிக்க பார்க்கிறது. எனவே வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு இடம்பெயர சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
    • கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

    எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.

    எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

    நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.

    இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    • தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு.
    • 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

    சென்னை:

    பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அரசு அறி விப்பு வெளியிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

    இதனால், குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி, பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.

    அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப் படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப் படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கணக்கிட்டு நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 எக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

    தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 2, பிளாட் எண்-59 மற்றும் 75, ரோஜாம்பாள் சுப்பிரமணிய முதலியார் தெரு, காரை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தங்கள் ஆட்சேபத்தை எழுத்து மூலமாக அளிக்கலாம்.

    ஆட்சேபனை மனுக்கள் மீது ஜூலை 22 மற்றும் 23 30-ந் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    ஏற்கனவே இது போன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொடவூர் கிராமம், அக்கமாபுரம், சிறுவள்ளூர் பகுதியில் உள்ள நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
    • நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

    விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆயிரத்து 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம் ஆகும். 3 ஆயிரத்து 200 ஏக்கர் பட்டா நிலங்கள். 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளன.

    இதையடுத்து புதிய விமான நிலையத்திற்காக விவசாயம் மற்றும் நீர் நிலை நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலங்களை கையகப்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த நில நாட்களுக்கு முன்பு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையின் 2-வது விமான நிலைய பணிக்கான டெண்டர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வெளியிடும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிய இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதன்பின்னர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளுக்கான டெண்டர் விடப்படும். மத்திய அரசின் கொள்கை அடிப்படையிலான ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்றார்.

    • பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது.
    • விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. இது விமான நிலைய எதிர்ப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர். இன்று முதல் இரவு நேர போராட்டத்தை நிறுத்திவிட்டு சட்ட போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும், வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகத்தை டிராக்டரில் சென்று முற்றுகையிட கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் மற்றும் பொடவூர் கிராம மக்கள் ஏராளமானோர் ஏகனா புரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து டிராக்டரில் சென்று நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×