search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளை"

    • இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது.
    • ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் வேறுபாடுகள் உள்ளன.

    மனிதர்களின் மரபணுவில் 99.9 சதவீதம் அனை வருக்கும் பொதுவானது, அப்படியென்றால் 0.1 சதவீதம் மட்டுமே ஒருவரின் தனித்துவத்தை உறுதிசெய்கிறது. அந்த வகையில் ஆண்களும் - பெண்களும் உடலளவில் மட்டுமே வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

    ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது. ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில் செயலாற்றுகின்றன என்பதே மருத்துவ உலகத்தின் கூற்று.

    ஒரு பெண், ஆண் போல் வேலை செய்வது கடினம், அதேபோல் ஓர் ஆணால், பெண்ணைப்போல் செயல்படுவதும் கடினம். இயற்கையின் படைப்பில் பெண் என்பவள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவள்.

    ஆண் என்பவன் அளவாகப் பேசிக் காரியத்தைச் செய்து முடிப்பவன். இதற்குக் காரணம் ஆண் மூளையும், பெண் மூளையும் அமைப்பிலும், செயல்திறனிலும் வேறுபடுவதே ஆகும். என்ன அந்த வேறுபாடு, என்பதை இப்பகுதியில் பார்ப்போமா?

    யார் அறிவானவர்?

    பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை 10 சதவீதம் (பெண் மூளை 1350கிராம், ஆண் மூளை 1450கிராம்) பெரியதாக உள்ளது. அதாவது ஆண் மூளை, பெண் மூளையைவிட 100-150 கிராம் எடை அதிகம் உள்ளது. அதற்காக ஆண், பெண்ணை விட அறிவானவன் என்று நீங்கள் யாரும் தப்பு கணக்குப் போட்டு விட வேண்டாம்.

    அறிவுத்திறன் என்பது மூளையில் உள்ள மேடுபள்ளங்களைப் பொறுத்துத்தான் உள்ளது. நாம் நம் மூளையின் 100 சதவீதத்தில் 5முதல் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்து கிறோம். ஒவ்வொருவரும் தன் மூளையில் எவ்வளவு விழுக் காடுகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

    சிலர் பிறவியிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே இருபாலரில் எவர் வேண்டுமானாலும் அறிவாளியாக இருக்கலாம்.

    பெண் ஏன் அதிகம் பேசுகிறாள்?

    பெண்களால் ஒரு நாளைக்கு 4000 முதல் 6000 சொற்களை எளிதில் பேச முடியும். ஆனால், ஆண்களால் ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 சொற்களே பேச முடியும். பேச்சுத் திறனுக்கான இடப்பக்க மூளையில் உள்ள பகுதி பெண்ணுக்கு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதே இதற்குக் காரணம்.

    ஆனால் ஓர் ஆண் அளவாகத்தான் பேசுவான், எல்லாப் பெண்களும் கண்டிப்பாக அதிகமாகத்தான் பேசுவார்கள் என்று 100 சதவீதம் கூறுவது கடினம்தான். விதிவிலக்கு என்பது இதற்கும் பொருந்தும்.

    ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?

    நம் மூளையின் வலப்பக்க அரைக்கோளம் இடப்பக்க உடலையும், இடப்பக்க அரைக் கோளம் வலப்பக்க உடலையும் இயக்குகின்றன.

    இந்த இரண்டு அரைக் கோளங்களையும் இணைப்பது கார்பஸ் கலோசம் எனப்படும் கமிசுரல் பைபர். இந்த பைபர் ஆண்களைவிடப் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனால் தான் ஒரு பெண் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய திறனைப் பெற்றிருக்கிறாள்.

    ஓர் ஆணால் ஒரே நேரத்தில் ஒரு வேலையைத்தான் முழுக்கவனத்துடன் திறம்படச் செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு ஆண்கள், குறிப்பிட்ட ஒரு பணியை மையமாகக் கொண்ட வேலைகளில் (பொற்கொல்லர்) சிறந்து விளங்குகிறார்கள்.

    ஒரு வேலையை இருபாலரும் செய்கையில் இருவருக்கும் மூளையில் எட்டு பகுதிகள் வேலைசெய்யும். எந்த எட்டுப் பகுதிகள் என்பது இருவருக்கும் மாறுபடுகிறது.


    பெண்கள் சிக்கல்களை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

    பெண்களின் மூளையில் உள்ள பிரீப்ரான்டல், ஆர்பிடோ பிரான்டல், சுப்பீரியர் டெம்போரல், லேட்டரல் பிரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் இன்சுலா போன்ற பகுதிகள் ஆண்களைவிடப் பெண்களுக்கு, சற்றுப் பெரிய அளவில் உள்ளது.

    மேலும் மூளையில் உள்ள ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவுடன் இணைந்திருக்கும் விகிதம் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகம், எனவே தான் பெண்கள் ஒரு செயலைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்துச் சிந்திக்கக் கூடியவர்கள், அதனால் சில நேரங்களில் சிக்கல்களைப் பெரிதாக்கிவிடுகிறார்கள்.

    சிக்கல்கள் என்று வரும்போது, பெண்கள் அவை எப்படி, எங்கிருந்து வந்தன? என்று சிந்திப்பார்களே தவிர அதற்கு என்ன தீர்வு? என்று சிந்திக்க மாட்டார்கள். ஆனால் ஆண்கள் அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களுக்குச் சட்டென முடி வெடுக்கும் திறன் பெண்களை விட அதிகம்.

    வாகனம் ஓட்டு வதில் வல்லவர்கள் ஆண்களே ஏன்?

    ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு ஆண்களால் எளிதில் சென்று வரமுடியும். இதற்கான இடம் மூளையில் பரைட்டல் (Parietal) பகுதியில் உள்ளது, இந்தப் பகுதி இடங்களையும், பாதை களையும் நினைவில் வைத்துக் கொள்வ தற்கான பகுதியாகும்.

    ஆண்களுக்குப் பெண்களைவிட இந்தப்பகுதி நன்கு வளர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம். அதனால் பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என்பது ஆண்களைப் போல் எளிதான செயல் அல்ல.

    ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

    கண்களில் கூம்புகள் எனப்படும் ஓர் அணு ரெட்டினா வில் உள்ளது. இது ஆண்களை விட 30 சதவீதம் அதிகமாகப் பெண்களுக்கு உள்ளதால், ஆண்களை விடப் பெண்களால் வண்ணங்களை எளிதில் பிரித்தறிய முடியும்.

    எனவே தான் நிறங்களில் உள்ள சிறிய மாறுதல் களைக் கண்டு பிடிப்பதில் மிகவும் சிறந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.


    வாழ்க்கைத் துணையை ஆண்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்களின் காட்சி களுக்கு முதன்மை அளிக்கிறது. எனவேதான் ஆண்கள் அழகான பெண்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பெண்களுக்கோ காட்சிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மனம் விட்டுப் பேசுவதாலும், நன்கு பேசும் ஆண்களினாலும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

    அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


    பெண்கள் உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பது ஏன்?

    பெண்களின் மூளையில் அதிக கிரேமேட்டர் இருப்பதற் கான சான்றுகள் உள்ளன. கிரேமேட்டரில் உள்ள நரம்பணுக்கள் உடல் இயக்கத்திற் கானவை, மேலும் இது தசைக் கட்டுப்பாடு, ஐம்புலன்கள் மற்றும் உணர்ச்சி களுடன் தொடர்புடைய மூளையின் பகுதியாகவும் இருக்கிறது.

    மேலும் மூளைக்குள் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும்போது, பெண்கள் வலுவான இணைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது சிறந்த உள்ளுணர்வு, சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

    எனவே தான் பெண்கள் எந்த வேலை செய்தாலும் உணர்வு நிறைவுடன் செய்ய முயல்வார்கள். பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.

    இப்படி இருபாலருக்கும் மூளை வேறுபடும் காரணத்தால், இருவரும் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் பல முதன்மையான வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

    • இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
    • இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது.

    வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கியிருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

    இருசக்கர வாகனம், பஸ், ரெயிலில் பயணிக்கும் பல பெண்களையும் இயர் போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர் போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

    இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையைக் கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப் பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


    நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல. இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும். இயர்போன்களில் இருந்து

    வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு. பாக்டீரியாவின் வளர்ச்சி உட்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

    இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

    இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

    • அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் நரம்பு தொடர்புடைய ஒரு வகை நோயாகும்.
    • 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உலக அல்சைமர் தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அல்சைமர் நோய்க்கான காரணம் மற்றும் அதன் தீவிரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி உலக அல்சைமர் தினம் தொடங்கப்பட்டது.

    அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் நரம்பு தொடர்புடைய ஒரு வகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக தங்களின் நினைவாற்றலை இழந்து விடுகின்றனர். உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். அல்சைமர் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான உலக அல்சைமர் தினத்தின் கருப்பொருள் `எப்போதும் சீக்கிரம், ஒருபோதும் தாமதமாகாது' என்பதாகும்.

    1901-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது இந்த நோயை முதன்முதலில் ஜெர்மன் மனநல மருத்துவரான `அலோயிஸ் அல்சைமர்' என்பவர் கண்டறிந்தார். எனவே இந்த நோய்க்கு அவரது பெயரே வைக்கப்பட்டது.

    சமீபத்திய நிகழ்வுகளை நினைவுபடுத்த இயலாமை என்பது நோயின் ஆரம்ப அறிகுறியாகும். மேலும் பிரச்சினைகளை தீர்ப்பதில் உள்ள சவால்கள், வீட்டில் அல்லது வேலையில் தெரிந்த பணிகளை முடிப்பதில் சிரமம், நேரம் அல்லது இடத்தை அறிவதில் குழப்பம், படிப்பதில் சிரமம், நிறத்தை அடையாளம் காண்பதில் சிரமம், பாதையை மறப்பது, தேதி மற்றும் நேரம் தவறாக வைப்பது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆரம்பகால கண்டறிதல், இந்த நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவுகிறது.

    • மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன.
    • மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும்.

    இந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர்இருக்கிறது. அதே நேரத்தில் முதியோர்களின் எண்ணிக்கை சதவீதமும் அதிகரித்து வருகிறது.

    முதுமைக்கு அரசு ஓர் அளவுகோல் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு 65 வயது, பெண்களுக்கு 60 வயது. ஆனால் உளவியல் கணக்குப்படி ஒருவருக்கு முதுமை என்பது 50 வயதிலேயே தொடங்கி விடுகிறது.

    இப்போது போகும் வேகத்தில் போனால் 2060-ல் இந்திய மக்களில் 34 கோடி பேர் முதியவர்களாக இருப்பார்கள்.

    பொதுவாகவே மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும் என்கிறது, மருத்துவ உலகம்.

    சராசரியாக 1394 கிராம் எடை கொண்ட மூளை, அதன்பின் 1161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்கு போகும் ரத்த ஓட்டமும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

    நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவை உணர்வு, வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைகிறது. நரம்பணு இழப்பும், இணைப்பு திசுக்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த எடை குறைவுக்கு காரணம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.

    ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன. இவை ஒரு மனிதனின் சுய நினைவாற்றல், மானம், வெட்கம் ஆகிய உணர்வுகளை மழுங்க செய்துவிடுகிறது. இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் கூட செயல்படுவார்கள். காலை, மாலை நேரம் போன்ற எதையும் புரிந்துகொள்ள முடியாது. உடையில் சிறுநீர் கழிப்பார்கள். குளித்துவிட்டு ஆடை அணியாமல் வெளியே வருவார்கள். எனவே இதுபோன்ற நிலையில் உள்ள முதியோர்களை பாதுகாக்க அரசுமருத்துவமனைகளில் முதியவர்களுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    ×