என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹேமந்த் சோரன்"
- சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
- 'ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள்'
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியத் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. மேலும் சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் தான் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகச் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரது எக்ஸ் பதிவில், கட்சித் தலைமை தன்னை அவமதித்து விட்டது.எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?தனது கட்சி தன்னை அவமதித்து விட்டதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் புது கட்சி தொடங்கும் முடிவை சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பியுள்ள சம்பாய் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலிலிருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான எனது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக ஒன்றை [அரசியல் கட்சியை] நான் தொடங்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.
ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சி தொடங்க நிறைய நேரம் இல்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சம்பாய் சோரன், அது உங்களின் பிரச்சனை இல்லை, ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள், அப்படி இருக்கும்போது புதிதாக [கட்சி] தொடங்குவதில் எனக்கு என்ன பிரச்சனை.
ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபடுவேன். இந்த பயணத்தில் பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் [கூட்டணி] அவர்களுடன் இணையவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.
- பிப்ரவரி 2-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்தார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் வலுக்கட்டாயமாக முதல்வர் பதவியை ஜனவரி 31-ந்தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூன் 28-ந்தேதி ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் ஜூலை 4-ந்தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 2 முதல் ஜூலை 3-ந்தேதி வரை மட்டுமே சம்பாய் சோரன் முதல்வராக இருந்தார். தற்போது ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை மந்திரியாக உள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கியமான துறைகள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் சம்பாய் சோரன் பாஜக-வில் இணையப்போவதாக வதந்திகள் பரவத்தொடங்கியது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சம்பாய் சோரன் பதில் அளித்து கூறியதாவது:-
என்ன வகையிலான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. என்ன விதமான செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாதால் அது சரியா? தவறா? என என்னால் கூற இயலாது. எனக்கு அதுப்பற்றி ஏதும் தெரியாது. நான் இங்கே (ஹேமந்த் சோரன் கட்சி) மட்டுமே இருக்கிறேன்.
இவ்வாற சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் செய்த தவறு என்ன?- கேள்வி எழுப்பிய பாஜக
சம்பாய் சோரன் மிகப்பெரிய ஆளுமை. அவருடைய பணியால் ஜார்க்கண்ட்டின் 3.5 கோடி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், முதல்வர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது. நல்ல நபர் முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்படுவது பின்னடைவாகும். அவர் செய்த தவறு என்ன? என பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், சம்பாய் சோரனை கட்சியில் சேர்ப்பது மத்திய தலைவர்களை சார்ந்தது என்றார்.
- மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வராக இருந்த , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கடத்த ஜனவரி 31-ந்தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை 3 அன்று வெளியில் வந்தார். அதனைதொடர்ந்து மீண்டும் அவர் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று [ஆகஸ்ட் 10] ஹேமந்த் சோரன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தருணத்தை பாஜக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக ஹேமந்த் சோரன் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது, சிறையில் இருந்து வெளிவரும்போது, அதிகாரிகள் தனது கையில் குத்திய கைதி முத்திரையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ஹேமந்த் சோரன், இது எனக்கு இடப்பட்ட முத்திரை மட்டுமல்ல, இது தற்போது நமது ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள சவால்களைக் குறிக்கும் முத்திரை என்று பதிவிட்டுள்ளார்.
आज अपने जन्मदिन के मौक़े पर बीते एक साल की स्मृति मेरे मन में अंकित है - वह है यह कैदी का निशान - जो जेल से रिहा होते वक्त मुझे लगाया गया। यह निशान केवल मेरा नहीं, बल्कि हमारे लोकतंत्र की वर्तमान चुनौतियों का प्रतीक है।जब एक चुने हुए मुख्यमंत्री को बिना किसी सबूत, बिना कोई… pic.twitter.com/TsKovjS1HY
— Hemant Soren (@HemantSorenJMM) August 10, 2024
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரை அரசியல் ஆதாயங்களுக்காக பலரை தேர்தலின்போது திட்டமிட்டு சிறையில் அடைந்ததாகவும் இதற்கு ஜனநாயக அமைப்பின் அங்கங்களுக்கான அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றைத் தவறாக பயன்படுத்தியாகவும் ஆளும் மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.
- குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள்.
சென்னை:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.
குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Wishing a very Happy Birthday to Hon'ble Chief Minister of Jharkhand, Thiru. @HemantSorenJMM!Even when faced with formidable hurdles, you've shown that your spirit to fight for the people's rights is unshakeable. May you continue to lead with the same strength and dedication.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2024
- அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதும், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாத் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது இந்த பெஞ்ச்.
உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியால் மிகவும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் விசாரணை நிலை அல்லது எந்வொரு விசாரணையிலும் விசாரணை நீதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பின், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் 8.86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதலமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.
பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஹேமந்த் சோரன் ஆஜராக நிலையில், அவரது வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை ஜனவரி 31-ந்தேதி கைது செய்தது.
- ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.
- ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்று அமலாக்கத்துறை அதன் மனுவில் புகார் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஜனவரி 31ம் தேதி கைது செய்திருந்தனர்.
பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின்படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார்.
- சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை.
ராஞ்சி:
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அன்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை யில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
நம்பிக்கைத் தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒரு மணி நேரத்தை சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ ஒதுக்கினார். இதையடுத்து விவாதம் நடந்தது.
பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. சுயேட்சை உறுப்பினர் சரயுராய் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- சாம்பை சோரன் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
- ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சம்பாய் சோரனின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுள்ளார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
இந்நிலையில், ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார்.
ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில், ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ளார். அதன்படி, சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கியுள்ளார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
- அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை முதலவர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.
- முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் கட்சியின் இந்த முடிவில் முதலமைச்சர் சாம்பை சோரனுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
- எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள் என்றார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியில் வந்தார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்டில் இருந்து காவி கட்சி ஒழிக்கப்படும்.
இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பா.ஜ.க.வுக்கு நிபுணத்துவம் உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது என தெரிவித்தார்.
- எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோடிச வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி கைது செய்தது.
இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து வெளியில் வந்துள்ளார். வெளியில் வந்த அவர் தான் சதியால் பாதிக்கப்பட்டேன் எனத் தெரிவித்தள்ளார். மேலும், நான் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டேன். எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன். ஆனால் நீதித்துறை செயல்முறை நீண்டது.
ஜூன் 13-ந்தேதி நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தலா 50 ஆயிரம் பிணைத்தொகையுடன் இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய் 55 பக்க ஜாமின் உத்தரவை வழங்கினார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சாம்பாய் சோரன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை வரவேற்றுள்ளனர்.
முதன்மை பார்வையில் குற்றவாளி அல்ல என்றும், ஜாமினில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்ததாக ஹேமந்த் சோரன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கட் முக்தி மோட்சா கட்சி தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்