என் மலர்
நீங்கள் தேடியது "அஷ்வினி வைஷ்ணவ்"
- அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
- தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- மத்திய அரசு ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளது என மத்திய மந்திரி கூறினார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்று நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இதற்குப் பின்னால் இருந்தது.
ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்.
மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது.
கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.
நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும். நல்லாட்சியே அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
- கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
- இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புவனேஷ்வர்:
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன.
- இந்த கோர விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், ரெயில் விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
- சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
- முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டவர்), இன்ஸ்கிராம் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு செய்தியை பதிவிட்டால், நொடிப்பொழுதிற்குள் பெரும்பாலானோரை சென்றடைந்துவிடும்.
ஆரம்ப காலத்தில் உண்மையான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது போலிச் செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை நம்பி வன்முறைகள் ஏற்படுவது. நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கப்படுவதும் உண்டு.
இதை கட்டுப்படுத்த சமூக வலைத்தளங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் முற்றிலும் போலியான செய்திகள் பரப்பப்பட்டுதான் வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில் ''முற்றிலும் போலியான செய்திகளை எதிர்கொள்ள நாம் புதிய விதிமுறை கொண்டு வர இருக்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்கள், முற்றிலும் போலியான தரவுகளை கண்டுபிடித்தல், தடுத்தல் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான நடைமுறை தேவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது" என்றார்.
- ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
- மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.
என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
- ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
நேற்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் ரெயில்வே துறை அமைச்சராக மீண்டும் அஷ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம், ரிசர்வ் இருக்கைகளில் ரிசர்வ் செய்யாத பயணிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கடும் விமர்சனத்திற்கு உள்ளான ரெயில்வே துறையை தனியாக கவனிக்கும் வகையில் அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ஆனால் மேலும் 2 துறைகளுடன் ரெயில்வேக்கு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஷ்வினி வைஷ்ணவுக்கு ரெயில்வே , தகவல் ஒலிபரப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.
- போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
- நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
- நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
- உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"
என்று பதிவிட்டுள்ளது.
- மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
- குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை.
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை.
குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பங்குச்சந்தை மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
- ரெயில் பாம்பு இருந்தது தொடர்பான புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.
ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரெயிலில் இருந்து அகற்றப்பட்டது.
ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை அவர் டேக் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.
இதே போல கடந்த மாதம் , ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது.
- RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம்.
இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது. RAC டிக்கெட் என்பது அர்த்தம் ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான இட ஒதுக்கீடு (Reservation Against Cancellation) என்பதன் சுருக்கமாகும். RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம். அதே சமயம் பெர்த்திற்கு ரெயில்வே உத்தரவாதம் அளிக்காது. அதாவது உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், RAC ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மற்றொரு பயணியுடன் நீங்கள் ஒரு பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.
இந்நிலையில் RAC டிக்கெட் குறித்து டெல்லியை சேர்ந்த ஜா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரெயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், தனது குடும்பத்தை சாத் விழாவை கொண்டாட டெல்லியிலிருந்து பீகாரில் உள்ள தர்பங்காவிற்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்யும்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் 30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ஆனால் ரெயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது எனக்கூறி எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை அவருக்கு பதிலளித்தது.
இதனையடுத்து ஜா தனது எக்ஸ் பதிவில், "ரெயில்வே அதிகாரி என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாளை உங்கள் ஊருக்கு செல்வதற்கான ரெயில் பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ரெயில்வே அமைச்சருக்கு என் நன்றிகள்" என்று அவர் பதிவிட்டார்.
- ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்படும்.
- போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும்தான் துவைக்கப்படுமா என காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.
ரெயிலில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர் தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்படும். இதற்கும் சேர்த்து டிக்கெட்டில் சார்ஜ் செய்யப்படும். துரந்தோ, கரிப் ராத் போன்ற ரெயில்களில் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா, "ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?" என மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்கப்படும். பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் கம்பளியும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ரெயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரெயில்வே துறைக்கு ஆங்கில நாளிதழ் ஒன்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருந்தது.
அதற்கு இந்திய ரெயில்வே அமைச்சகம், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .