search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள மாநிலம்"

    • ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும்.
    • ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சாதி மத பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டியைாக ஓணம் திகழ்கிறது. இந்த விழா நடக்கும் 10 நாட்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் 10-வது நாளில் ஓணம் கொண்டாடப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது நடக்கும் ஓண விருந்து பிரசித்திபெற்றது. இதில் அறுசுவை கொண்ட பலவித உணவுகள் இடம் பெறும்.

    ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும். ஓண விருந்தில் இடம்பெறும் உணவு பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். அதேபோன்று ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இதற்காக கேரளாவின பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் சந்தைகளுக்கு வரும். இருந்த போதிலும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.6 கோடி வரை வாழை இலை வர்த்தகம் நடந்துள்ளது. அதில் தமிழகத்திற்கு ரூ.4 கோடி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிர மடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி இருக்கிறது. இந்நிலையில் வருகிற 30-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுதினம் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மோசமான வானிலை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தி இருக்கிறது.

    • நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறவம் என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் உள்ள நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தங்கியிருப்பதை அப்பகுதி பொதுமக்கள் அறிந்தனர்.

    அதுகுறித்து அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜாய் என்பவரின் வீட்டில் இருந்த நாய் அடைக்கும் கூண்டில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த தொழிலாளி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் ஆவார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளியாக கேரள மாநிலத்துக்கு வந்திருக்கிறார். கட்டிட வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்த அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லாத காரணத்தால் அடிக்கடி வீட்டை மாற்றியபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் தான், தனது நண்பர் ஒருவரின் மூலம் ஜாய் வீட்டில் உள்ள நாய் கூண்டில் வாடகைக்கு தங்கி வந்திருக்கிறார்.

    அந்த இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் குடியேறியிருக்கிறார். அதற்கு மாத வாடகையாக 500 ரூபாய் கொடுத்துள்ளார். ஒரு நாய் தங்கக்கூடிய வகையில் இருந்த குறுகிய இடத்துக்குள் ஷியாம் சுந்தர் தங்கி வந்திருக்கிறார். அந்த சிறிய அறைக்குள்ளேய தங்கியிருந்தது மட்டுமின்றி, உணவு சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

    இதனையறிந்த அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளி ஷியாம் சுந்தர் மற்றும் அவர் தங்கியிருந்த நாய் கூண்டு இருந்த வீட்டின் உரிமையாளர் ஜாய் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மனிதாபிமானமற்ற முறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    நாய் கூண்டில் விரும்பி தங்கியதாக தொழிலாளி ஷியாம் சுந்தர் தெரிவித்திருக்கிறார். இதனால் வீட்டின் உரிமையாளர் ஜாய் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஷியாம் சுந்தரை அவர் தங்கியிருந்த இடத்தில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வில்லை.

    அவரை அவருடைய நண்பரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நாய் கூண்டில் புலம்பெயர் தொழிலாளி வாடகை கொடுத்து தங்கியிருந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களின் பரவல் மேலும் அதிகரித்தது.
    • முதியவர் ஒருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட ஏராளமான வைரஸ் காய்ச்சல்கள் பரவின.

    பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களின் பரவல் மேலும் அதிகரித்தது. அங்கு சாதாரண காயச்சல்கள் மட்டுமின்றி அமீபிக் மூளைக்காய்ச்சல், வெஸ்ட் நைல், ஷிகல்லா வைரஸ் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் பரவின.

    இந்த காய்ச்சல்களுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தபோதிலும் தொற்று பரவல் கட்டுக்குள் வரவில்லை.

    இந்நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு முதலில் காய்ச்சல் பாதித்தது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதில் அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிறப்பு தனி வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.

    அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சுகாதாரத் துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் 101 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் மலப்புரத்தை சேர்நத 68 வயது முதியவர் ஒருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அந்த முதியவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு மலப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சுகாதாரப்பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறையின் மருத்துவ குழு கேரள விரைந்துள்ளது. அந்த குழுவினர் தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவ தொடங்கியது. அந்த ஆண்டில் நிபா வைரசுக்கு 17 பேர் பலியாகினர். அதன்பிறகு 2021-ம் ஆண்டில் ஒருவரும், 2023-ம் ஆண்டில் 2 பேரும் நிபா வைரசுக்கு பலியாகினர். கேரள மாநிலத்தில் நிபா வைரசுக்கு இதுவரை 21 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

    அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான். இதற்கிடையில் அவனது கிராமத்தில் மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்தை சேர்ந்த 214 பேர் கண்காணிப்பில் உள்ளனர். பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
    • கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

    அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது சுவாசத்தை அதிகரிக்க மாணவன், வெண்டி லேட்டர் சிகிச்சையில் உள்ளான். இதற்கிடையில் அவனது கிராமத்தில் மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்தை சேர்ந்த 214 பேர் கண்காணிப்பில் உள்ளனர். பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் சுகாதாரக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

    கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    உடல் உறுப்புகள் தானத்துக்கு நமது நாட்டில் பல்வேறு கடுமையான விதிமுறைகள் உள்ளன. இதனால் சில கும்பல் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை பெற்று, வெளிநாடுகளில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று சம்பாதித்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் இதுபோன்று உடல் உறுப்புகளை பெறுவதற்காக ஈரானுக்கு ஆட்களை கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த ஷாபித் நாசர் என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர்.

    இவர் ஏழ்மையில் உள்ள பலரை, பணத்தாசை காண்பித்து ஈரானுக்கு அழைத்துச் சென்று அவர்களது உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், கடந்த 2019-ம் ஆண்டு 30-க்கும் மேற்பட்டபவர்களை ஈரானுக்கு கடத்திச் சென்று உடல் உறுப்புகளை பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தில் ஷாபித் நாசருடன் மேலும் பலருக்கு தொடர்ப்பு இருக்கலாம் என்று கருதிய போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, ஷஜித் சியாம் , அவரது உறவினராக கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கேரளாவை சேர்ந்த சில மருத்துவமனை ஊழியர்களும் உடல் உறுப்புகளுக்காக ஆள் கடத்தலுக்கு உதவிய தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடல் உறுப்பு வர்த்தகம் மற்றும் அது தொடர்பான மனித கடத்தல் வழக்கை விசாரிக்கும் எர்ணாகுளம் ஊரக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் ஐதராபாத்தை தளமாகக் கொண்டு உடல் உறுப்பு மோசடி கும்பலின் மன்னன் செயல்படுவது தெரியவந்தது. அவனை ரகசியமாக கண்காணித்த கேரள போலீசார் ஒரு ஓட்டலில் வைத்து கைது செய்தனர். அவன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பிரசாத் (வயது 41) ஆவார். பல்லம்கொண்டா ராம் பிரசாத் என அழைக்கப்படும் அவரை கொச்சிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார். ஆனால் அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு தான் அவர் நன்கொடையாளர்களை கண்டுபிடித்து, ஈரானுக்கு கடத்தி உடல் உறுப்புகளை விற்கும் செயலில் இறங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தொடர்புடைய மது என்பவர், இன்னும் ஈரானில் உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன்.
    • சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே சமயத்தில் பொறாமையாகவும் உணர்கிறேன். ஏனென்றால் இங்குள்ள மக்கள் எந்த வகுப்புவாத சக்திகளையும் கேரளாவுக்குள் அனுதிக்க மாட்டார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக கேரளா உள்ளது.

    சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். கேரளாவுக்கு ஒவ்வொருமுறை வருகைக்கு பிறகும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதற்கான உத்வேகத்தை நான் மீண்டும் பெறுகிறேன்.

    தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட ராகுல் காந்தியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அது பலனளிக்க வில்லை. எனது தலைவர் கேரளாவில் போட்டியிடுவதில் எனக்கு பொறாமையாக இருக்கிறது. கேரளாவை தன் குடும்பம் போன்று உணர்வதால் இங்கு போட்டியிடுவதாக என்னிடம் ராகுல்காந்தி கூறினார்.

    பிரதமர் மோடி ஒரு ராஜா போன்று செயல்படுகிறார். மக்கள் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தனர். அதனை அவர் தவறிவிட்டுவிட்டார். அவர் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே இந்த முறை மக்களவை தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள்.

    பிரதமர் மோடி நாட்டை பிளவுபடுத்த பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார். அது சரியல்ல. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி தவறாக பேசுவது பதவிக்கு ஏற்புடையதல்ல. அது நாட்டுக்கும் நல்லதல்ல. பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் வேறு விதமாக பேசினார். ஆனால் இன்று பதவிக்கு வந்தவுடன் இதுபோன்ற விஷயங்களை சொல்வது சரியல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவகத்தில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் பெற்று ‘குழிமந்தி பிரியாணி’சாப்பிட்டனர்.
    • குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    அரிசி மற்றும் இறைச்சியை சேர்த்து தயாரிக்கப்படக்கூடிய உணவு 'குழிமந்தி பிரியாணி'. ஏமன் நாட்டை பிறப்பிட மாகக் கொண்ட இந்த உணவு கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு வகை ஆகும். கோழி, ஆடு மற்றும் மாடு ஆகிய இறைச்சிகளை பயன்படுத்தி 'குழிமந்தி பிரியாணி' தயாரிக்கப்படுகிறது.

    கேரளாவில் பலர் இதனை விரும்பி சாப்பிடுவதால் ஏராளமான அசைவ ஓட்டல்களில் 'குழிமந்தி பிரியாணி' விற்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள ஓட்டலில் 'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்ட வர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த உணவகத்தில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் பெற்று 'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்டனர்.

    அவர்களில் 85 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொடுங்கல்லூர் மற்றும் இரிஞ்சாலக்குடா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்டதால் ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலையறிந்த சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர். குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாழப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர். இவர் மனித உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்று வெளிநாடுகளில் அதிகவிலைக்கு விற்று வந்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில் அவர் ஈரான் நாட்டுக்கு சென்றுவிட்டு விமானத்தில் கேரளாவுக்கு திரும்பி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் பயணித்த விமானம் வந்த கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சபித் நாசரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் அவருடன் உடல் உறுப்பை சட்டவிரோதமாக பெறுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரும் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது சிறுநீர கத்துக்காக தன்னை ஈரானுக்கு அழைத்துச் சென்றிருந்தாக தெரிவித்தார். இதையடுத்து சபித் நாசரை போலீசார் கைது செய்தனர்.

    சபித் நாசர் பணம் தேவைப்படும் கஷ்டப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்றுஆசை வார்த்தை கூறுவார். அவ்வாறு கூறும்போது தனது வலையில் விழுபவர்களை ஈரானுக்கு அழைத்துச்சென்று, அறுவை சிகிச்சை செய்து அவரது உடல் உறுப்புகளை பெற்றிருக்கிறார்.

    பின்பு அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்குவிற்று சம்பாதித்து வந்திருக்கிறார். அவர் ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சபித் நாசரின் செல்போனை ஆய்வு செய்ததில் உடல் உறுப்புகளுக்காக ஆட்களை கடத்தியது, கடத்தப்பட்ட நபர்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதிக விலைக்கு விற்றது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆதாரங்கள் சிக்கின.

    சபித் நாசர் மீது உடல் உறுப்புகளை சட்டவிரோத மாக எடுத்து ஈரானுக்கு கடத்தி கொண்டுசென்றது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், உடல் உறுப்புகள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக அவர் செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது.
    • காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே காயங்குளம்-புனலூர் சாலையில் ஏழம்குளம் பட்டாசி முக்கு பகுதியில் சம்பவத்தன்று இரவு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே ஒரு கார் வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அந்த காரின் முன்பக்க இருக்கையில் இருந்த பெண் மற்றும் காரை ஓட்டிய நபர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் இடுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களின் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    உயிருக்கு போராடியபடி இருந்த காரை ஓட்டிவந்த நபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அந்த நபர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். விபத்தில் சிக்கி பலியான இருவரும் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் சாரும்மூடு பகுதியை சேர்ந்த ஹாசிம்(வயது31), ஆலப்புழா மட்டப்பள்ளியை சேர்ந்த அனுஜா ரவீந்திரன் (37) என்றும், இருவர்கள் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாசிம் மாற்றுப்பாதையில் அதிவேகமாக காரை ஓட்டிவந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரை லாரியில் மோதச்செய்து இருவரும் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    அனுஜா பந்தளம் அருகே உள்ள தும்ப மண் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஹாசிம் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்தது இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போது அவர்களது வாகனத்தை ஒரு இடத்தில் ஹாசிம் வழிமறித்து நிறுத்தியிருக்றிார்.

    பின்பு தனது காரில் ஆசிரியை அனுஜாவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் ஆசிரியையை வலுக்கட்டாயமாக தனது காரில் ஹாசிம் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சக ஆசிரியர்கள், சிறிறு நேரம் கழித்து அனுஜாவுக்கு செல்போனில் பேசியுள்ளனர்.

    அப்போது அவர், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும் அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இந்நிலையில் அவர்களது கார் லாரி மீது மோதி இருவரும் பலியான தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர். அனுஜாவுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் கூறிய தகவலில், தாங்கள் போனில் பேசியபோது அனுஜா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததாக கூறினர்.

    இதனால் அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதச்செய்து தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் தனது மகன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று ஹாசிமின் தந்தை ஹக்கீம் கூறியிருக்கிறார். அதனடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
    • போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்லடம் பகுதியில் சமூக வலைதளம் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் லாட்டரி சீட்டுகள் படங்கள் வெளியாகியும், உளவுத்துறை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அவர்களின் ஆதரவோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×