search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்தமழை"

    • ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கல்லூரி மாவட்டம் பெடப்பயலு அடுத்த குஞ்சு வாடா பகுதியில் காட்டாறு உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

    தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவு செய்தார். சமையல் செய்யும் பெரிய பானையில் மூதாட்டியை அமர வைத்து நீந்தியபடி ஆற்றை கடந்து அக்கரைக்குச் சென்றார்.

    பின்னர் தாயை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஆபத்தான முறையில் தாயை பானையில் உட்கார வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மழை காலங்களில் இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பாலம் அமர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தினர். 

    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
    • அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு திடீரென காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதும் பின்பு குறைந்து விடுவதுமாக உள்ளது.இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். 

    • ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

    பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, வெள்ளேரி, விலக்கலாடி, ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, கூடலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி சேரம்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது. கடும் குளிர்மற்றும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×