search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேச பிரதமர்"

    • இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி நேற்று பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.

    அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் கூடுதல் வழிகள் குறித்து விவாதித்தனர்.

    • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார்.
    • கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாட்டை ஒருங்கிணைத்து, கடல்சார் துறையில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயும் நோக்கத்துடன் ஜூன் 30-ந்தேதி வங்காளதேசத்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். கலந்துரையாடலின்போது, வங்காளதேச பிரதமர் 1971-ல் வங்காளதேசத்தின் விடுதலைப்போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார்.

    இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் விளக்கினார்.

    • தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார்.
    • வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச துணை தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தோம் என்றார்.

    அதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ஹசீனாவுடன், கவுதம் அதானி சந்திப்பு.
    • மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என ஹசீனா தகவல்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஆலியா தர்காவுக்கு சென்ற ஹசீனா வழிபாடு நடத்தினார். பின்னர் வங்காளதேச தூதரகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, மியான்மர் நாட்டில் இருந்து தப்பி தற்போது வங்கதேசத்தில் வசித்து வரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், இந்தியா ஒரு பெரிய நாடு, ரோகிங்கியா அகதிகள் பிரச்சினையை சமாளிக்க வங்களாதேசத்திற்கு இந்தியா நிறைய உதவ முடியும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து எல்லை தாண்டி ஓடும் நதிகளை புத்துயிர் பெறச் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

    அந்த ஆறுகளை தூர்வாரினால் அவற்றின் நீரோட்டம் இன்னும் மேம்படும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அவர் எனக்கு ஒரு சகோதரி போன்றவர், நான் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்க முடியும்.நாங்கள் எப்போதும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன், ஹசீனா பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

    ×