search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் வரத்து"

    • 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.
    • அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

    சேலம்:

    தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் ஐந்தருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

    இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 118.84 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 62 ஆயிரத்து 870 கனஅடியாக காணப்பட்டது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளுக்கு இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 41 ஆயிரத்து 772 கனஅடியாகவும், நீர்மட்டம் 119.02 அடியாகவும் உயர்ந்தது.

    மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.43 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 54 ஆயிரத்து 459 கனஅடியாகவும் இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.

    இதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அணையின் கரையோர பகுதிகளில் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    இந்த நிலையில், இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

    • நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பி டிப்பு பகுதியில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    ×