search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை உயர்வு"

    • வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை உயர்வு.
    • இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.

    பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    வெளிமாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பீன்ஸ் விலை குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கும், அதேபோல் ஊட்டி கேரட், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-

    நாசிக் வெங்காயம்-ரூ.38

    சின்ன வெங்காயம்-ரூ.60

    உருளைக்கிழங்கு-ரூ.34

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.50

    வரி கத்தரிக்காய்-ரூ.40

    பீன்ஸ்-ரூ.50

    அவரை க்காய்-ரூ.60

    வெண்டைக்காய்-ரூ.15

    முருங்கைக்காய்-ரூ.60

    ஊட்டி கேரட்-ரூ.60

    பீட்ரூ.ட்-ரூ.25

    முள்ளங்கி-ரூ.30

    சவ்சவ்-ரூ.30

    கோவக்காய்-ரூ.30

    வெள்ளரிக்காய்-ரூ.30

    குடை மிளகாய்-ரூ.50

    பன்னீர் பாகற்காய்-ரூ.50

    நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50

    புடலங்காய்-ரூ.25

    முட்டை கோஸ்-ரூ.20

    பீர்க்கங்காய்-ரூ.20

    சுரக்காய்-ரூ.8

    • கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
    • பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2-வது வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. மழை சற்று இடைவெளி விட்ட நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.27 ஆக குறைந்திருந்தது.

    கடந்த ஒரு வாரமாக தமி ழகம் மற்றும் அதை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. கேரட்டும் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே இறுதி வாரத்தில் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், நேற்று கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது.

    மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ.65, நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.60, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.28, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் உள் மவாட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்காடகா மாநில எல்லையோர பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் முழுவதும் தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்" என்றனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது.

    போரூர்:

    தக்காளியின் விலை ரூ.100-யை கடந்து உச்சம் தொட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே பெரிய வெங்காயம், சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையும் திடீரென அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

    • தக்காளி வரத்து 310 டன்னாக குறைந்ததால் விலை ஏற்றம்
    • சென்னையில் இதுவரை இவ்வாறு விலை உயர்ந்ததில்லை எனக் கூறப்படுகிறது

    தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1200 டன் தக்காளி வரும். ஆனால், இன்று 310 டன் தக்காளி மட்டுமே வந்ததால் நேற்றைய விலையை விட இன்று 10 ரூபாய் அதிகரிக்க முக்கிய காரணமாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் தெரிவித்ததாவது:-

    வெளி சந்தைகளில் தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்திய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலைக்கு தக்காளி பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

    • தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு திருமல்வாடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஏரி பஞ்சப்பள்ளி, பெரியானூர், பாளையம், பென்னாகரம், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் விளையும் தக்காளிகளை ராயக்கோட்டை, ஜிட்டான்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, கம்பைநல்லூர், மொரப்பூர், இருமத்தூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி மண்டி செயல்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை சென்னை, பெங்களூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் தினசரி வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் 15 கிலோ கூடை தக்காளி 400 முதல் 450 வரை விவசாயிகள் இடத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. இன்று 15 கிலோ தக்காளி கூடை 800 ரூபாய்க்கும் 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.

    மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சில்லறையில் கிலோ 68 முதல் 70 வரை உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெகுவாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவித்தனர்.

    • 30-க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது.
    • தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பகுதி விவசாயி களிடம் கொள்முதல் செய்து தக்காளி களை பெட்டிகளில் அடுக்கி சென்னை, பெங்களூர், கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு 27 கிலோ பெட்டி தக்காளி ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
    • வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, இண்டூர், நாகதாசம்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பெலமாரம்பட்டி, திருமல்வாடி, காரகூர், பாளையம், பெரியனூர், ஜக்க சமுத்திரம், கொளசன அள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, ஐந்து மைல்கள், ஜிட்டான்ட அள்ளி, வெளிச்சந்தை, கம்பைநல்லூர், உள்ளிட்ட தக்காளி மார்க்கெட்டிற்கு 100 டன் முதல் 150 டன் வரை தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் , கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது.

    ஆனால் கடந்த ஆண்டு சராசரியை விட மாவட்டத்தில் மூன்று மடங்கு கூடுதலாக மழை பெய்ததால் விவசாய நிலங்களில் நீர் தேங்கி தக்காளி செடிகள் அழுகி சேதம் அடைந்தது. அதனால் தினசரி தக்காளி மார்க்கெட்டிற்கு தற்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரி உழவர் சந்தையில் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .வெளிமார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூபாய் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • கால நிலை பருவ மாற்றத்தால் மழை பெய்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
    • தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை பருவ மாற்றத்தால் மழை பெய்துள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது.

    தற்போது ரூ.450 முதல் ரூ.600 வரை விற்பனையானது . அய்யலூர் தினசந்தையில் சுமார் 10 டன் களுக்கு தக்காளி வந்திருந்தது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அய்யலூர் சின்ன சந்தைக்கு வரும் தக்காளி இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சென்னையில் தக்காளி விலை உயர்ந்ததால் திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு பசுமை பண்ணைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெளிமாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து நின்றுள்ளது.

    தற்போது முகூர்த்த நாட்கள், திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே ஒருகிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    ×