search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சி மஸ்தான்"

    • இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேர் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிறகு, தமிழர்களின் உடல்கள் தனி வாகனம் மூலம் கொண்டுவரப்படுகிறது.

    • விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
    • அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இந்தியர்களின் சடலங்களை கொண்டு வந்த விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட இருக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்தியர்களின் உடல்களை எடுத்துவரும் விமானம் கேரளா வந்தடையும் முன்பே கொச்சி விரைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும், கொச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களின் சடலங்கள் தனி வாகனங்கள் மூலம் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.

    • விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

    * விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    * விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
    • தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும் தகவல்.

    தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை பெரிதாக பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இப்போது வருவாய் என்பது பெரிய விஷயமே இல்லை. சாதாரண கூலித்தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மக்கள் மத்தியில், ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.

    இப்போது விலைவாசி ஏறும் சமயத்தில் மக்கள் பெரிய அளவில் சிரமப்படவில்லை. அதற்கு ஏற்ற வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. வருவாய் கூடுதலாக வருவதால் ஓரளவு சரிசெய்ய முடிகிறது.

    தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
    • அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர். நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சாமி ஆடிக்கொண்டு ஒரு பெண் வந்தார். அவரிடம் சென்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் என்ன என்று கேட்டபோது அண்ணாநகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கிறோம் எங்கள் பகுதிக்கு ரோடு போட்டு தரணும் என்று கேட்டார் .

    அதற்கு வழியில் உள்ளவர்கள் நிலம் தந்தால் சாலை அமைத்து தருகிறேன் என்று அமைச்சர் சொன்னதற்கு அதையெல்லாம் நீ பார்த்துக்கோ எங்களுக்கு ரோடு தான் வேணும் என்று சொன்னார். பின்னர் அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
    • வேலை தேடி சென்று இன்னல்களுக்கு ஆளானவர்களை அரசு மீட்டு வருகிறது.

    இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;-

    வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • இந்த ஆண்டு புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதி மிகவும் வளர்ந்த பகுதியாகும். எனவே செஞ்சி வட்டாரத்தை பிரித்து மேல்மலையனூர் வட்டாரமும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் செஞ்சியை சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியால் இந்த ஆண்டு புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்து இந்த ஆண்டே கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.அதன்படி நேற்று வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். முன்னதாக கல்லூரியில் தேசிய கொடியை அமைச்சர் ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், இளம் வழுதி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல் மணி, தலைமை ஆசிரியர் கணபதி ,தேசிய பசுமை படை பாலசுப்ரமணியன், தேசிய மாணவர் படை குமரவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×