search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசகம்"

    • கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார்.
    • சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகத்தை நாம் பார்த்திருப்போம்.

    மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

    கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார். அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் பெண்ணை நம்பாதே என்று பொருள் கொள்ளும் இந்த வாசகத்தை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.

    காரில் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கரை யதார்த்தமாக பார்த்த போலீஸார் கார் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் பக்குவமாக பேசி ஸ்டிக்கரை அகற்ற வைத்துள்ளனர்.

    பொதுவெளியில் இதுபோன்ற வாசகத்தை வெளிப்படையாக பதிவிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என எக்ஸ் பக்கத்தில் கொல்கத்தா போலீசார் பதிவிட்டுள்ளனர். கொல்கத்தா போலீசின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    நம் ஊர்களில் ஆட்டோக்களுக்கு பின்பு சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். கொல்கத்தா போலீசாரை போல தமிழ்நாடு போலீசாரும் பெண்களை அவமதிக்கும் இத்தகைய ஸ்டிக்கரை பார்த்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
    • மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநல மருத்துவத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.

    மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், நிலையை அலுவலர் செல்வம், கண்காணிப்பாளர் மத்தியாஸ், சென்னை மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அசோகன், மனநலத்துறை தலைவர் மீனாட்சி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×