என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிரிவல பாதை"
- பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- மான்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு?
- நகராட்சி ஊழியர்கள் அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது.
கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு நேர்திக்க டனுக்காக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர். கோவில் நிர்வாகம் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்குவதற்காக அனுமதி அளித்திருந்தனர்.
அருணாசலேஸ்வரரை தரிசிப்பதற்காகவும், பரணி மற்றும் மகா தீபத்தை காண்பதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களுக்கு அனுமதித்த 101 இடங்களில் அன்ன தானங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிலர் அனுமதி வழங்கப்படாத இடத்திலும் அன்னதானங்களை வழங்கி யதாக கூறப்ப டுகிறது.
பக்தர்க ளுக்கு வழங்கிய அன்ன தானத்தை பேப்பர் கப் மற்றும் பாக்கு தட்டு போன்ற வைகள் மூலம் வழங்கினர். இதனை வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் பேப்பர் கப்பு களையும், பாக்கு தட்டுகளையும் ஆங்காங்கே வீசி சென்றனர். இதனால் கிரிவல பாதை முழுவதும் குப்பையாக கிடந்தது.
நகராட்சி ஊழியர்கள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே தூக்கி வீசி எறிந்த பேப்பர் கப்புகள் மற்றும் பாக்கு தட்டுகளை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலப் பாதையில் மான்கள் சுற்றி திரிகின்றன. தூக்கி எரியும் பேப்பர் கப்புகளை மான்கள் சாப்பிடுவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி னர். இதுபோன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அன்னதானம் சாப்பிட்ட பின் குப்பை தொட்டியில் போட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- காலை குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா நடந்தது
- கார்த்திகை தீபத்திற்குள் கும்பாபிஷேக விழா நடைபெறும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் உள்ளன.
இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் ஆகிய 10 கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய நடைபெற உள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா இந்திர லிங்கம் கோவிலில் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.
இதில் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பணிகள் வரும் கார்த்திகை தீபத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்