என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை"

    • மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.

    அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

    நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்தித்தது.

    மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    • இன்றைய 2 போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது.
    • இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

    இந்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கவிருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

    • இன்றைய போட்டியிலும் கோலி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு
    • கோலியை எதிர்கொள்ள காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. உலகின் அதிவேக வேகப்பந்து வீச்சிற்கான ஆடுகளம் என்று இந்த மைதானம் அழைக்கப்படுகிறது.

    இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த விராட் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் கோலியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடாவும், அன்ட்ரிச் நார்ஜே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • இறுதியில் 13.5 ஓவரில் 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்து பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.

    டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் 2-வது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

    பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைய விளையாடி வந்தனர். இறுதியில் 13.5 ஓவரில் 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்து பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.

    இதில் முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 49 ரன்களும், பாபர் அசாம் 5 பந்துகளில் 4 ரன்களும், பாகர் சமான் 16 பந்துகளில் 20 ரன்களும், ஷான் மசூத் 16 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து இப்திகார் அகமது 6 ரன்கள் மற்றும் ஷதாப் கான் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தார்.

    • தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை.
    • 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை.

    மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன் எடுத்தார்.

    தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    • 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
    • இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 68, ரோஹித் சர்மா 15, விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர்.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென் ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 68, ரோஹித் சர்மா 15, விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்நிலையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

    அதன்படி தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
    • கிடைத்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    • கேட்சுகளை தவற விட்டதற்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர்.  


    நாங்கள் ஃபீல்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் கேட்ச்களை நழுவ விட்டோம் என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம்.

    எனினும் நேற்றைய போட்டியில் எங்களது ஃபீல்டிங் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்தோம். ஆனால் நேற்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 


    எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.
    • இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மழையால் போட்டிகள் நிற்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளும் வலுவான அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடி வருவதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

    இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.

    இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • டி 20 உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதியது.

    இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரை இறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 2.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

    • டி 20 உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    காலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதியது.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில், 2.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடியது.

    இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    • வங்காள தேசம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் மோத உள்ளது.
    • இந்தியா, வங்காள தேசம் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் உள்ளது.

    இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் காரணமாக வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது.

    நாளை வங்காள தேசத்துடன் மோதுகிறது. 6-ந்தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    வங்காள தேசம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் மோத உள்ளது. நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இரண்டில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வங்காள தேச அணி விளையாட இருக்கும் எதிரணிகள் பலம் வாய்ந்தவை. மேலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி எனக் கணிக்கப்பட்டவை. ஆகவே, வங்காளதேசத்திடம் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தோல்வியடைந்தால், அது இரண்டு அணிகளுக்கும் மிகப்பெரிய தடையை உருவாக்கும்.

    இந்த நிலையில், இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    நாளை இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் அல் ஹசன் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

    ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம். உலகக்கோப்பையில் எங்களுடைய வீரர்களில் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலைப்படவில்லை. போட்டியில் அனைத்து துறையிலும் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவனம் வெலுத்துகிறோம்.

    மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களுடன் சிறந்த அணி. நாங்கள் சிறப்பாக விளையாடி, எங்களுடைய நாளாக அமைந்தால், நாங்கள் வெற்றி பெற முடியாததற்கான காரணம் இருக்க முடியாது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வீழ்த்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அதே வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.

    இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள். சிறந்த ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளனர். நாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வரவில்லை.

    இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அப்செட் அடைய செய்ய முயற்சி செய்வோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

    இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சாதனையின்படி அனேகமாக, அவர் நம்பர்-1 வீரராக இருப்பார் என நினைக்கிறேன். மேலும், உலகத் தரம் வாய்ந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். நாங்கள் இன்னும் ஆலோசனை கூட்டம் போடவில்லை. ஆலோசனை செய்த பின், எந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசுவோம். நாங்கள் வெற்றி பெற விரும்பினால், அனைத்து துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

    • நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
    • தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

    அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்.குறிப்பாக அலெக்ஸ் ஹாலெஸ் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.

    சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் சான்ட்னெர் பந்துவீச்சில் 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.

    மறுபுறம் மொயீன் அலி (5) ரன்கள் , லியாம் லிவிங்ஸ்டன் (20) ,ஹார்ரி புரூக்( 7 ) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

    ×