search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
    • நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.

    ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

    அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

    நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
    • இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்தது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

    இதில், இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, ராகுல் தனது மற்ற துணை ஊழியர்களுக்கு வழங்கிய அதே பரிசு தொகையை (ரூ. 2.5 கோடி) விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டின் இந்த பெருந்தன்மையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இதுதான் ஒரு மனிதனின் அடையாளம். இதை தான் எல்லாரும் ரோல் மாடல் என்று அழைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
    • இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்தது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

    இதில், இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, ராகுல் தனது மற்ற துணை ஊழியர்களுக்கு வழங்கிய அதே பரிசு தொகையை (ரூ. 2.5 கோடி) விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.50 லட்சத்தை பி.சி.சி.ஐ. பரிசாக அறிவித்தது. அச்சமயத்தில் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், பரிசு தொகையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என பி.சி.சி.ஐ.யை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை எம்.எஸ்.டோனி பிடித்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் தெரிவித்துள்ளது. 

    • எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை டோனியிடம் கொடுப்பது போன்ற AI படத்தை பகிர்ந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அதில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல' என்று பதிவிட்டுள்ளது.

    • இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
    • லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது

    டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    • உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசினார்
    • இது மைத்தனத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    டி20 உலகக்கோப்பையை வென்றெடுத்த இந்திய அணிக்கு நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதனத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்கள் பாடல்களுக்கு நடனமாடியும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தும் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் இந்தியா வந்திறங்கியதில் இருந்து இருந்து மக்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காண்கிறோம். இந்த கோப்பை அவர்களுக்கே சொந்தம்.

    மும்பை எப்போதும் வெற்றியை கொண்டாடுவதில் ஏமாற்றியது இல்லை. ரசிகர்கள், மக்கள் மற்றும் மொத்த தேசத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அணியின் வீரர்கள் குறித்து அவர் பேசுகையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் உலகின் பயங்கரமாக வீரர்களின் ஒருவராக விளங்கும் டேவிட் மில்லரை வீழ்த்த எங்களுக்கு பேருதவியாக இருந்தது. கடைசி ஓவரில் பதிவீசுவது எப்போதும் கடினமான ஒன்று. ஆனால் அதை செய்து காட்டிய பாண்டியாவுக்கு Hats off என்று தெரிவித்தார். ரோகித்தின் பேச்சால் நெகிழ்ச்சி அடைந்த பாண்டியா கண்கலங்கினார். இது மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

    • தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மனமுடைந்து வெளியேறினர்
    • தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இறுதிப்போட்டிவரை எந்த மேட்சிலும் இரண்டு அணிகளும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு பக்கத்தில் இருந்தே பெரும்பாலானோர் பார்க்கும் நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியால் மனமுடைந்துள்ளதை பற்றி சிலர் மட்டுமே எண்ணியிருக்கக் கூடும்.

     

    ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு  மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து  கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிஸன்கள், இந்தியர்களின் நல்லியல்பை எண்ணி பெருமைப்பட்டு வருகின்றனர். 

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது இந்திய அணி.
    • ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்றுள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றப்பெற்றதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் விதிவிலக்கான செயல்பாட்டின் மூலம் "தங்கள் விமர்சகர்களை வாயடைத்து உள்ளனர்" என்று கூறினார்.

    பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது.

    இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது:-

    ரோஹித் சர்மாவின் விதிவிலக்கான தலைமையின் கீழ், இந்திய அணி குறிப்பிடத்தக்க உறுதியையும் பின்னடைவையும் வெளிப்படுத்தியுள்ளது.

    ஐசிசி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்ற முதல் அணியாக மாறியுள்ளது.

    அவர்கள் தங்கள் விமர்சகர்களை மீண்டும் மீண்டும் நட்சத்திர நிகழ்ச்சிகளால் எதிர்கொண்டு அமைதிப்படுத்தியுள்ளனர்.

    அவர்களின் பயணம் உத்வேகம் தருவதற்கு ஒன்றும் இல்லை, இன்று அவர்கள் முன்னணி வரிசையில் இணைகிறார்கள்.

    இந்த குழு அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவற்றால் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.

    ரோஹித் ஷர்மாவின் தலைமையில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிறரின் உதவியால் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    ×