search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் முன்பதிவு"

    • பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
    • இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கியது. சனி, ஞாயிறு அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால் வெளியூர் செல்பவர்களின் ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன.

    குறிப்பாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய தென் மாவட்ட ரெயில்களில் உயர் வகுப்பு படுக்கையை தவிர மற்ற இடங்கள் நிரம்பின.

    இந்த நிலையில் இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் உறுதியான டிக்கெட்டை எடுத்தனர். பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பயணத்திற்கான இடங்கள் நிரம்பி விட்டன.

    நாளை (சனிக்கிழமை) ஜனவரி 12-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் எல்லாம் நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டன.

    நாளை நடக்கும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் 15, 16-ந் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு இதைவிட பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

    • ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
    • தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஜனவரி மாதம் 14-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையும் 15-ந்தேதி (புதன் கிழமை) மாட்டு பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13-ந்தேதி (திங்கட்கிழமை) வருகிறது.

    அரசு விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே பயணத்தை திட்டமிடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ள சனி, ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் ஜனவரி 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் பயணம் தொடங்குகிறது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போகி பண்டிகை அன்று ஒரு நாள் விடுமுறை போட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    ரெயில் உறுதியான டிக்கெட் கிடைப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதால் 120 நாட்களுக்கு முன்பாக பயணத்தை திட்டமிட்டு இன்று முன்பதிவு செய்ய தொடங்கினர்.

    ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. டிக்கெட் எடுப்பதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணாநகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்து நின்றனர்.

    ஒரு சிலர் அதிகாலை 5 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பின.

    நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், தென்காசி, பொதிகை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் நிரம்பின.

    டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்ற ஒரு சிலருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. மற்றவர்கள் காத்திரிப்போர் பட்டியலுடன் டிக்கெட்டை பெற்று சென்றனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்தனர். இதனால் கவுண்டர்களில் காத்து நின்றவர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    ஏ.சி., 2-ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டும் இடங்கள் காலியாக இருந்தன. ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் மட்டுமின்றி பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதால் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

    மேலும் ஜனவரி 11-ந்தேதி செல்ல விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமையும், ஜனவரி 12-ந்தேதி பயணத்திற்கு வருகிற 14-ந்தேதியும் முன்பதிவு செய்ய தயாராக உள்ளனர்.

    பொங்கல் பயணத்திற்கான வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பி விட்டன. சென்னை-நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அனைத்து வந்தே பாரதம் ரெயில்களிலும் இடங்கள் இல்லை.

    • பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.
    • 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.

    பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    அந்த வகையில், ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

    • 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
    • 7 நிமிடங்களில் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை சிறப்பு ரெயில்கள் அறிவித்தாலும் அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விடப்பட்ட சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் எப்போதும் முழு அளவில் செல்கின்றன.ரெயில்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய திட்டமிட்ட முன்பதிவு தான் சிறந்ததாக உள்ளது.

    ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமின்றி வசதியாகவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதாலும் சாதாரண முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தட்கல் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் பயணத்தை திட்டமிட்டு தொடர வசதியாக 4 மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

    பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களை கணக்கிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தை மக்கள் தொடர்கின்றனர்.

    இந்த நிலையில் ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ந் தேதி (புதன்கிழமை) பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 10-ந் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டு செல்பவர்கள் நாளை (12-ந் தேதி) வேண்டும். ஆயுத பூஜை நாளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி பயணத்தின் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க விருபுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய காத்து நின்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், அடையாறு, அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்பதிவு மையங்களில் குறைந்த அளவில் மக்கள் வரிசையில் நின்றனர்.

    இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுண்டர்களுக்கு வருவது இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    அதன்படி முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பி விட்டன. கவுண்டர்களில் வரிசையில் நின்ற சிலருக்கு உறுதியான டிக்கெட் கிடைத்தது.

    7 நிமிடங்களில் தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்திலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    • இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன.
    • நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப் பொங்கல், 17-ந்தேதி காணும் பெங்கல் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11-ந்தேதி பயணம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 120 நாட்களுக்கு முன்பாக பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மையங்களில் திரண்டிருந்தனர்.

    மையங்கள் திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலானோர் இணையதளங்களில் முன்பதிவு செய்தனர். டிக்கெட் கவுண்டர்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் கூட்டம் இருந்தது.

    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    இரண்டாம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றன. குறிப்பாக தென்மாவட்ட ரெயில்கள், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. ஏ.சி. வகுப்பு டிக்கெட் மட்டும் சில இருந்தன. ஜனவரி 12-ந்தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும்.

    • தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும்.
    • ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும், ரெயில்களும் இயக்கப்படும்.

    இதேபோல, தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும். அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    • ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
    • பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (செப்.13) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    அடுத்த ஆண்டு ஜன. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ந் தேதி பொங்கல், 16-ந் தேதி மாட்டுப் பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.

    ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில், ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12-ந்தேதிக்கு செப்.14-ந்தேதியிலும், ஜனவரி 13-ந்தேதிக்கு செப்.15-ந்தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12-ந்தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரெயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.

    • சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.
    • கன்னியாகுமரி, நெல்லை, குருவாயூர், முத்துநகர் எக்ஸ்பிரசில் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து 15-ந் தேதி மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை கிராமப்புறங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புவார்கள். அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் செய்யும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    ஜனவரி 10-ந் தேதிக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. ஜனவரி 11-ந் தேதிக்கு நேற்று முன்பதிவு செய்தனர். பொதுவாக பொங்கலுக்கு 2 நாட்கள் முன்பு தான் சொந்த ஊர் பயணம் மேற்கொள்வார்கள். பெரும்பாலானவர்கள் 12-ந் தேதியும் கடைசி நேர பயணத்தை தொடங்குவோர் 13-ந் தேதியும் புறப்பட்டு செல்வார்கள்.

    அந்த வகையில் ஜனவரி 12-ந் தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான முன்பதிவை இன்று செய்தனர். 120 நாட்களுக்கு முன்பு ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்காமல் குடும்பத்துடன் பயணம் செய்ய முன்பதிவு செய்வது பாதுகாப்பானது எனக் கருதி முன்பதிவு செய்ய திட்டமிட்டனர்.

    காலை 8 மணிக்கு முன்பதிவுக்கான நேரடி புக்கிங் கவுண்டர் திறக்கப்பட்டது. ஆனால் கவுண்டர்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. அனைவரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்தனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்வதற்கு காலை 6 மணிக்கே தயாராக இருந்தனர். 8 மணிக்கு இணையதளம் திறக்கப்பட்டவுடன் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அம்பத்தூர், அடையார், பெரம்பூர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பதிவு கவுண்டர்களில் நின்ற பயணிகள் சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது.

    முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் முக்கிய ரெயில்களுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தன.

    இணையதளம் வழியாக பொதுமக்கள், ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்வதில் தீவிரமாக இருந்தனர். முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் எல்லா இடங்களும் நிரம்பியது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    முதல், 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி இடங்கள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. முன்பதிவு மையங்களில் வரிசையில் காத்து நின்ற சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைத்தது. பலர் ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற்று சென்றனர்.

    கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்தூர் முத்துநகர், மதுரை பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை, பொதிகை, அனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் 50-ஐ தொட்டன.

    குருவாயூர் எக்ஸ்பிரசில் மட்டும் 2-ம் வகுப்பு படுக்கை 200-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. நாகர்கோவில் சிறப்பு ரெயிலிலும் படுக்கை வசதி காலியாக இருக்கின்றன.

    கன்னியாகுமரி, நெல்லை, குருவாயூர், முத்துநகர் எக்ஸ்பிரசில் 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. கொல்லம் எக்ஸ்பிரசில் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை நிரம்பி விட்டன. ஏ.சி. படுக்கை வசதி மட்டும் உள்ளன.

    இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. பகல் நேர ரெயில்களில் இடங்கள் காலியாக இருக்கின்றன.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி வருகின்றன. ஒரு சில சிறப்பு ரெயில்களில் இடங்கள் காலியாக உள்ளன.

    ×