என் மலர்
நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை கிரிக்கெட்"
- நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- இலங்கை தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 1-ல் இடம் பெற்ற நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 15 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து பிலிப்ஸ் - மிட்செல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடி பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார். 104 ரன்கள் எடுத்த அவர் குமாரா பந்து வீச்சில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- இலங்கையை 102 ரன்னில் நியூசிலாந்து சுருட்டியது
- நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் ஆலென் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் ஆலென் 1 ரன், கான்வே 1 ரன், கேப்டன் வில்லியம்சன் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நிசாங்கா 0, குசல் மெண்டிஸ் 4, தனஞ்ஜெயா 0, அசலங்கா 4, கருரத்ணே 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து கேப்டன் சனகா - ராஜபக்சா ஜோடி சிறுது நேரம் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். ராஜபக்சா 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசரங்கா 4, திக்ஷனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 65 ரன்னில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி 93 ரன்னில் 9-வது விக்கெட்டை பறிகொடுத்தது. சனகா 35 ரன்னில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதிப்படுத்தி விட்டது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது.
- இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த்தில் நடைபெற்றது. அதிவேக பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாதல் திணறினர். சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும். ஆனால், தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.
சூப்பர் 12 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.
பாகிஸ்தான் 3-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய மங்கி விட்டது. பாகிஸ்தான் அடுத்து தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். ஒன்றில் தோல்வியடைந்தால் கூட வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததன் மூலம், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை அழித்து விட்டது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ''தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்து விட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். நாம் இதை அடுத்தவர்கள் மீது விட்டுவிட்டோம். இந்தியா மீண்டும் வலுவாக திரும்பும் என்றும் நம்புகிறோம். இந்தியா விளையாடிய விதம், தரமான பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய அணிகளின் நிலை, வெளிப்படையாக வெளிப்படும் என்பதை காட்டுகிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது. இருந்தாலும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. அவர்களுக்கு இன்னும் எளிதான ஆட்டங்கள் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் கடினமான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பார்க்கும் வகையில் அது கடினமாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளது. இருந்தாலும், எனது அணிக்குதான் ஆதரவு. என்னதான் நடக்கும் என்றும் பார்ப்போம்.
இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது எளிதானது அல்ல. இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது. இந்திய வீரர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு, 150 ரன்கள் எடுத்திருந்தால், அது வெற்றிக்கான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், எங்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது.
தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வங்காளதேசம் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜிம்பாப்வே 3 இடத்திலும் உள்ளன.
- முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர்.
- ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
அடிலெய்டு:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்யும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.
20 ஓவர் உலக கோப்பை தொடரில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை (குரூப் 1) எதிர்கொள்கிறது.
2 வெற்றி (இலங்கை, அயர்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி (நியூசிலாந்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இங்கிலாந்துக்கு எதிராக ) என்று 5 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி ரன்-ரேட்டில் வெகுவாக பின்தங்கி இருக்கிறது. இதனால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனை செய்தாலும் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குரிய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். குறிப்பாக நியூசிலாந்து அணி, அயர்லாந்திடம் வீழ்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தீரும்.
அயர்லாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் களம் காணுவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 'உடல் தகுதி சோதனையின் போது ஒரு சதவீதம் திருப்தியில்லை என்றால் கூட விளையாடமாட்டேன். இருப்பினும் நான் விளையாடுவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்' என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். பிஞ்ச் ஆடாவிட்டால் மேத்யூ வேட் கேப்டன் பணியை கவனிப்பார்.
முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 2 தோல்வி (இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக), 2 முடிவில்லையுடன் (நியூசிலாந்து, அயர்லாந்துக்கு எதிராக) 2 புள்ளி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. சூப்பர்12 சுற்றில் வெற்றி பெறாத ஒரே அணியான ஆப்கானிஸ்தான், ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப தீவிரமாக முயற்சிக்கும்.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மோதி இருக்கின்றன. மூன்றிலும் ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கும் சுழற்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அல்லது கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட் அல்லது ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், குல்படின் நைப், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முஜூப் ரகுமான், பரீத் அகமது, பாசல்ஹக் பரூக்கி.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
- நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.
நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார்.
- வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
- அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
அடிலெய்டு:
8-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் விளையாடும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன.
சூப்பர்-12 சுற்றின் ஆட்டங்கள் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதுவரை எந்த அணியும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.
குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப்-1 பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
காலை 9.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது.
மூன்று புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை) உள்ள அயர்லாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது.
டாஸ் ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்துவந்த நீசம், சட்னர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
- அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்-1 பிரிவில் இன்று காலை அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பால் ஸ்டிரிசிங் (37 ரன்) பால்பிர்னி (30 ரன்) அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது. அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டும், சோதி, டிம்சவுத்தி, சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அரை இறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அந்த ரன் ரேட் வலுவாக இருப்பதாக அரை இறுதிக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது.
- அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிதாஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக ரிச்சர்சன் அணியில் இடம் பிடித்தார். கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் - கீரின் பேட்டிங் செய்தனர். கீரின் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் - டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 50 எடுத்த போது வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்மித் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 45 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 25 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேப்டன் வேட் 6 ரன்னிலும் போல்ட் ஆனார்.
கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரஷித் கான் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஸ்கோர் 200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் - கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.
இதனையடுத்து இப்ராஹிம் - குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் ஆஸ்திரேலியா 34 சதவிதமும் இருந்தது.
இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ரன் அவுட் ஆனார். 2-வது பந்தில் இப்ராஹிம் 26 ரன்னிலும் 4-வது பந்தில் நஜிப்புல்லா 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் நபி 1 ரன்னில் அவுட் ஆனார்.
இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார்.
கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்னும் கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும்.
- இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது.
சிட்னி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.
அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தை இலங்கை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9-ல் இங்கிலாந்தும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது. போட்டிக்கு மழை ஆபத்து இல்லை.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
- இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.
இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை நாளை (6- ந் தேதி ) எதிர் கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. அரை இறுதியில் நுழைய இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் திக்கு முக்காடிதான் வெற்றி பெற்றது. அதாவது தோல்வியில் இருந்து தப்பி வெற்றி கிடைத்தது.
இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். ஜிம்பாப்வே அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து, பாகிஸ்தான்-வங்காள தேசம் மோதும் போட்டிக்கு பிறகுதான் இந்தியா விளையாடும் ஆட்டம் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் ஆடும்.
பேட்டிங்கில் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 4 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 220 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து நிலையாகவும், அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.
லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே.
தினேஷ் கார்த்திக் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா நாளைய ஆட்டத்திலாவது அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று எதிர் பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (9 விக்கெட்), ஹர்த்திக் பாண்ட்யா (6 விக்கெட்), முகமது ஷமி (4 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 3 புள்ளியுடன் இருந்தது. பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப் பட்டது. வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளிடம் தோற்று இருந்தது.
ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
- அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
- இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 9 ரன்னிலும் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த சனகா 3, ராஜபக்சா 22, ஹசரங்கா 9, கருரத்ணே 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.