search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறநோயாளிகள்"

    • நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
    • டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் கொடுக்கும் பணியாளர் நீண்ட நேரமாக பணியில் இல்லாததால் நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    டோக்கன் கொடுப்பவர் வெளியே சென்றுள்ளதாக கூறிய தூய்மைப்பணியாளர், தொடர்ந்து அநாகரிகமாக பேசினார்.

    கேள்வி கேட்ட நோயாளிக்கு, ஒருமையிலும் திமிராகவும் தூய்மைப் பணியாளர் பதில் அளித்தார்.

    சிஎம் செல்லுக்கு போன் செய்து கூறுவதாக அந்த நோயாளி கூற,

    நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.

    100-க்கு போன் செய்தால் போலீஸ் வரும் என்று அவர் கூற...

    100 போலீஸ்... 2000 போலீஸ் பார்ப்பேன் என்று அந்த தூய்மைப்பணியாளர் கூறுகிறார்.

    டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை விருந்தினரைபோல பார்த்துக்கொள்வதாக டீன் தெரிவித்தார்.
    • 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் அப்துல் வாஹித். இவர் இதே பகுதியில் 4 சக்கர வாகனத்தை நாள் வாடகை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் சிவகங்கைக்கு திருமண நிகழ்விற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரிதமாக பரிசோதித்து 2 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு மாற்றினர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில், இங்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் இவர் உள்நோயாளி, இவர் புறநோயாளி என்ற பாகுபாடின்றி வீட்டிற்கு வரும் விருந்தினரைபோல நன்றாக கவனித்துக் கொள்கிறோம். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பணிமாறுதலாகி வரும்போது முகப்பு தோற்றம், வளாக பகுதிகளில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் அமருவதற்கு இருக்கை இல்லாத நிலையும், நோயாளிகளின் படுக்கைகள் பற்றாக்குறையாகவும் இருந்தது.

    தற்போது அமைச்சர், கலெக்டர் உதவியுடன் புதிதாக 100 படுக்கைகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமருவதற்கான இருக்கை களும் ஏற்படுத்தி உள்ளேன்.

    கொரோனா தொற்று காலங்களில் மிகவும் குறைந்த நோய் தொற்று உள்ள மாவட்டமாக சிவகங்கை இருந்தது. இதற்கு காரணமாக என்னுடன் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலிய ர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் அப்துல் வாஹித் கூறுகையில், என்னை போன்ற அடித்தட்டு மக்கள் நோய் நொடி காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை வீண்விரயம் செய்யாமல் மற்ற மாநிலங்களை காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை காட்டி தமிழக அரசு வழங்கும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    கடந்த காலங்களில் தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் டீன் ரேவதி பாலன் மருத்துவராகவும், டீனாகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×