என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்கள்"

    • ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000.
    • பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர்.

    ஆண்கள் மட்டும ல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழ்நாடு காவல்துறை க்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவ ரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்றனர்.

    ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பணி நாள் மற்றும் ஊதியம் மிக குறைவு.

    ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000, கேரளாவில் தினமும் ரூ.626 ஊதியத்துடன் ரூ. 18780, பாண்டிச்சேரியில்791 ஊதியத்துடன் ரூ.23730, கர்நாடகாவில் 400 ஊதியத்துடன் ரூ.12000பெறுகிறார்கள்.

    அவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ஐந்து பணி நாட்களுடன், நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2800 ஊதியம் என்பது மிகவும் குறைவானதாகும்.

    மேலும் அவர்களின் முழு கவனமும் இப்பணியைச் சார்ந்தே இருப்பதினால், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாக்கும்.

    குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூட ஊர்க்காவல் படை யினரின் நலன் காக்கப்படும் என்றும்,அவர்களின் பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்- அமைச்சர் நடவடிக்தகை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • 2-வது முறையாக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
    • அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    குளச்சல், செப். 17-

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி, பனவிளை வழியாக இயங்கி வந்த தடம் எண் 5 ஜி வி, 9 ஜெ, 9 ஜி மற்றும் 88 டி அரசு பஸ்கள் கடந்த 3 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக வும் அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நிறுத்த ப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந் தேதி ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மறியல் போராட்டம் நடத்த ஊர்மக்கள் திரண்டனர். தகவலறிந்த குளச்சல் பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங், கண்காணிப்பாளர் ஜெய ராஜ், கண்ட்ரோலர் காந்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பஸ்கள் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.ஆனால் உறுதிமொழிப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதனால் மீண்டும் மறியல் நடத்த பொதுமக்கள் முயற்சித்தனர். பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங் மாவட்ட லெனினிஸ்ட் செயலாளர் அந்தோணிமுத்துவிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் உறுதியாக பஸ்கள் இயக்கப்படும் என கூறியதை அடுத்து மீண்டும் அனை வரும் கலைந்து சென்றனர்.

    ×