என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ஆம்புலன்சில்"

    • நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி மைலா (21). நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருடன் குத்தியாளத்தூரில் இருந்து மயிலாவை ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.

    108 ஆம்புலன்ஸ் கிட்டா பாளையம் வனப்பகுதியில் வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    • நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கடுக்காம் பாளையம் பகுதி அருகே சென்ற போது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    மருத்துவ நிட்புநர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வள்ளிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா , கடம்பூர் மலைப்பகுதி ஒசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனை யடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புல ன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு ஒசப்பாளையம் பகுதிக்கு வந்தது.

    அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவர், செவிலியர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துக்க ல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    இதையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட 108 ஆம்புலன்சு டிரைவர் ராஜ்குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் விஜய் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது நந்தினி- மாதேவன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்சு மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன டிரைவர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தாளவாடி, 

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்துராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவி னர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திக்கு வந்த 108 ஆம்புன்ஸ் ஓட்டுநர் ராஜப்பாஜி, உதவி மருத்துவர் தனசேகரன் தாளவாடி மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

    முதியனூர் அருகே அடர்ந்த வனப்பகுதி வனச்சாலையில் ஆம்பு லன்ஸ் சென்று கொண்டி ருந்த போது ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமாகவே வாக னத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உதவி மருத்துவர் பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணு க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    • ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
    • இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தேவர்மலை கல்வாரை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஜீவலதா (22). ஜீவலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக் ராஜா, அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி ஜீவலதாவை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புநர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுகா ப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

    • காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    ஈரோடு:

    வட மாநிலத்தை சேர்ந்தவர் சம்பு மகா நந்தா. இவரது மனைவி காயத்ரி. இவர்கள் இருவரும் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆலாங்காட்டு புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர காலம் மருத்துவர் காயத்ரியை குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட விஜயமங்கலம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தெப்பக்காடு அடுத்த காசிகல் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் ( 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாதம்மாளை அழைத்துக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்டு, தாயையும், குழந்தையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    ×