என் மலர்
நீங்கள் தேடியது "பன்றி காய்ச்சல்"
- திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
- பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரித்திருக்கிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அது மட்டுமின்றி பறவை காய்ச்சலும் கேரளாவில் பரவியது. இதன்காரணமாக ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள், கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
மடக்கத்தனம் பகுதியில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. இதனால் அங்கு மாநில கால்நடைத்துறை முகாமிட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக உருவாக்கப்பட்ட மீட்பு குழுவினர் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. மடக்கத்தனம் பகுதியில் இதுவரை 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு எங்கும் இருக்கிறதா? என்று கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வெங்கடேச புரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரோஜா நேற்று பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான தகவல் மல்லசமுத்திரம் பகுதியில் வேகமாக பரவியது.
இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கடேசபுரி, ஏரிக்காடு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் அச்சம் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் மல்லசமுத்திரம் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
- பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- பன்றி காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும்,
- பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
தமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.
மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.