என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூலூர் அருகே"
- வடமாநில வாலிபர்களிடம் இருந்து 880 சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் அருகே உள்ள பேக்கரி முன்பு சிலர் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரிய நாயக்கன் பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி விற்ற 2 வட மாநில தொழிலாளர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 880 கஞ்சா சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சந் சாடா (வயது 30), ராஜ்குமார் (29) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
செட்டிப்பாளையம் போலீசார் மலுமச்சம்பட்டி அம்பாள் நகர் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஈரோட்ைட சேர்ந்த ஜி. கோகுல் (22), திருச்சியை சேர்ந்த கே. கோகுல் (22) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சிறுமுகை போலீசார் அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற அறிவு திருக்கோவில் வீதியை சேர்ந்த பிளம்பர் யுவராஜ் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் யுவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- இந்த சம்பவம் கொலையா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் காடு குட்டை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொ ண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் கம்பிவேலி பகுதி அருகே ஆண் பிணம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு நிர்வாண கிடந்த ஆணின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும் என தெரிந்தது.
உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் இவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யபட்டரா? மதுபோதையில் யாராவது அடித்து கொன்று யாராவது உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? அல்லது போதை தலைக்கேறிய நிலையில் இறந்தாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
- 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சூலூர்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர்கள் யமுனா(வயது24), சைலஜா(22). இவர்கள் 2 பேரும் திருநங்கைகள்.
நேற்று இரவு யமுனாவும், சைலாஜாவும் கோவை சிந்தாமணிபுதூர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருநங்கைகள் அருகில் சென்று பேசினர். திடீரென வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கைகளை குத்தினர்.
இதில் 2 திருநங்கைகளுக்கும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்